ஏர்டெல், பேடிஎம் நிறுவனங்களுக்குப் போட்டியாக இந்திய தபால் துறை பேமெண்ட்ஸ் வங்கி உரிமத்தை பெற்றது!
பேமெண்ட்ஸ் வங்கிக்கான உரிமத்தை பெற்றதைத் தொடர்ந்து விரைவில் வங்கி சேவை துவங்கப்படும் என்று தபால் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வர்த்தக ரீதியாகப் பேமெண்ட்ஸ் வங்கியைத் துவக்குவதற்கான உரிமத்தை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவிடம் இருந்து இந்திய தபால் நிறுவனம் பெற்றது.
பேமெண்ட்ஸ் வங்கிக்கான உரிமத்தை பெற்றதைத் தொடர்ந்து விரைவில் வங்கி சேவை துவங்கப்படும் என்று தபால் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பார்தி ஏர்டெல், பேடிஎம் நிறுவனங்களைத் தொடர்ந்து மூன்றாவதாகப் பேமெண்ட்ஸ் வங்கி சேவையைத் துவக்குவதற்கான உரிமத்தை இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி பெற்றுள்ளது.
பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்குகளில் தனிநபர்கள் அல்லது சிறு நிறுவனங்கள் அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய் வரை வங்கி கணக்கில் பணத்தை வைக்க இயலும்.
இந்தப் புது வங்கி சேவையின் மூலம் மொபைல் நிறுவனங்கள், பல்பொருள் அங்காடி போன்ற நிறுவனங்களை வங்கி சேவை அளிக்க முடியும். ஆனால் இந்த வங்கி சேவையின் மூலம் கடன் ஏதும் பெற முடியாது. வங்கி கணக்கில் பணத்தை வைத்தல், இணையதள வங்கி போன்ற சேவைகளின் மூலம் பணத்தை ஒரு வங்கி கணக்கில் இருந்து பிற வங்கி கணக்குகளுக்குப் பணத்தை அனுப்புவது பெறுவது போன்றவற்றைச் செய்யலாம்.
11 நிறுவனங்கள்

2015-ம் ஆண்டுப் பேமெண்ட்ஸ் வங்கி சேவைக்காக 11 நிறுவனங்களுக்கு ஆர்பிஐ ஒப்புதல் வழங்கியது. அதில் இந்தியா போஸ்ட் நிறுவனனும் ஒன்று ஆகும்.
எனினும் டெக் மகேந்திரா, சன் பார்மா, ஐடிஎப்சி வங்கி, டெலினார் நிதி சேவைகள் மற்றும் சோழமண்டலம் இன்வெட்ஸ்மெண்ட் மற்றும் ஃபினான்ஸ் ஆகிய நிறுவனங்கள் பேமெண்ட்ஸ் வங்கி துவங்குவதில் இருந்து பின்வாங்கி உள்ளன.


ஏர்டெல்
8 நிறுவனங்களில் முதலாவதாக 3,000 கோடி ரூபாய் முதலீட்டில் பேமெண்ட்ஸ் வங்கி சேவையைத் துவங்கி உள்ள ஏர்டெல் நிறுவனம் கணக்கில் வைக்கும் தொகைக்கு 7.25 சதவீதம் வரை வட்டி விகதம் அளிப்பதாக அறிவித்து இந்தியா முழுவதும் தனது சேவையைத் துவங்கி உள்ளது.
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக ஏ பி சிங் நியமிக்கப்பட்டுள்ளார். ஆதார் திட்டத்தை நிறுவுவதில் குழு உறுப்பினராகவும், பங்கு விற்பனைத் துறையில் இணை இயக்குனர்காவும் இவர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆதித்யா பில்ரா நூவோ, ஃபினோ பேடெக், நேஷனல் செக்யூரிட்டிஸ் டெபாசிட்டரி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், வோடபோன் எம்-பேசா நிறுவனங்களும் விரைவில் பேமெண்ட்ஸ் வங்கி சேவை அளிக்கும் பணியில் இறங்கி உள்ளத் குறிப்பிடத்தக்கது.