Jun 22, 2016

“பெண்களை அறைகளில் தங்க வைக்காதீர்கள்!




   “பெண்களை அறைகளில் தங்க வைக்காதீர்கள்!எழுதும் முறையை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்காதீர்கள்கைத்தறியையும் அந்நூர்அத்தியாயத்தையும் கற்றுக் கொடுங்கள்!”என்று நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்ஆயிஷா (ரலி)நூல்ஹாகிம் (3494)இதே கருத்து தப்ரானியின்முஃஜமுல் அவ்ஸத் என்ற நூலிலும் பைஹகீ அவர்களுக்குரிய ஷுஅபுல்ஈமான் என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்குஎன்ற பழமொழியை நபி (ஸல்)அவர்கள் தான் சொல்லித் தந்திருப்பார்களோ என்று நாம் எண்ணும் வண்ணம்இந்த செய்தி அமைந்துள்ளது.

பெண்கள் வேலை செய்தவற்கு என்றே படைக்கப்பட்டவர்கள்அவர்களுக்குபடிப்புத் தேவையில்லைஅவர்கள் சிறு தொழிலை கற்றுக் கொண்டு வேலைசெய்து கொண்டிருக்கட்டும்மார்க்கம் தொடர்பான செய்திகளை அறிந்து நூர்அத்தியாயத்தைக் கற்றுக் கொள்ளட்டும்அவர்களை நல்ல அறைகளில் தங்கவைக்க வேண்டாம்!  என்று இச்செய்தி நமக்கு உணர்த்துகிறது!முதலில்இந்தச் செய்தி அறிவிப்பாளர் வரிசைப் படி சரியானதாஎன்பதைநாம்  பார்ப்போம்இச் செய்தியைப் பதிவு செய்த இமாம் ஹாகிம் அவர்கள், “இந்தச் செய்தி ஆதாரப்பூர்மானது” என்று இச்செய்தியைப் பதிவு செய்துவிட்டு அதன் இறுதியில் குறிப்பிடுகிறார்கள்.ஆனால் இவர்களின் இக்கூற்று சரியானது அல்ல என்பதை இந்த நூலுக்குவிளக்கவுரை எழுதிய இமாம் தஹபீதனது தல்கீஸ் எனும் நூலில் “இதுஇட்டுக்கட்டப்பட்டது” என்றும் இந்த செய்தியின் அபாயகரமான நபர் (இச்செய்தியின் ஐந்தாவது அறிவிப்பாளர்அப்துல் வஹ்ஹாப் என்பவராவார்.இவரைப் பெரும் பொய்யர் என்று அபூஹாத்திம் கூறியுள்ளார்கள் என்றும்தெளிவுபடுத்தியுள்ளார்கள்.மேலும் இவரைப் பற்றி இமாம் புகாரீ அவர்கள், “இவரிடம் (அடிப்படைஇல்லாதபுதுமையான செய்திகள் உண்டு” என்றும் “இவர் இட்டுக்கட்டிசொல்பவர்” என்று இமாம் அபூதாவூத் அவர்களும், “இவர் விடப்படவேண்டியவர்” என்று இமாம் உகைலீதாரகுத்னீபைஹகீ ஆகியோரும்குறிப்பிட்டுள்ளனர்.

இமாம் நஸயீ அவர்கள் “இவர் நம்பகமானவர் இல்லை” என்றும் இவருடையபெரும்பாலான செய்திகள் இட்டுக்கட்டப் பட்டவை என்று ஸாலிஹ் பின்முஹம்மத் அவர்களும் குறிப்பிட்டுள்ளனர். (தஹ்தீபுத் தஹ்தீப்பாகம்: 6,பக்கம்: 395)எனவே இந்தச் செய்தி அறிவிப்பாளர் வரிசையின் அடிப்படையில்ஆதாரத்திற்கு ஏற்றது அல்ல என்பது நிரூபணமாகிறது.இதே செய்தி இடம் பெறும் தப்ரானீயின் அல்முஃஜமுல் அவ்ஸத் என்றநூலில் அப்துல் வஹ்ஹாப் என்பவர் அல்லாமல் வேறு அறிவிப்பாளர்வரிசையில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அதிலும் பலவீனம் இருக்கிறது.இந்த நூலில் இடம் பெறும் ஐந்தாவது அறிவிப்பாளர்முஹம்மத் பின்இப்ராஹீம்  என்பவர் “பெரும் பொய்யர்” என்று இமாம் தாரகுத்னீ அவர்களும்இவருடைய செய்திகளை (இட்டுக்கட்டப்பட்டது என்றுதெளிவுபடுத்துவதற்காகவே தவிர அறிவிக்கக் கூடாதுஏனெனில் இவர் (நபிகளார்மீதுஇட்டுக்கட்டிச் சொல்பவர்” என்று இப்னுஹிப்பான் அவர்களும்குறிப்பிட்டுள்ளார்கள். “இவருடைய பெரும்பாலான செய்திகள் சரியானவைஅல்ல” என்று இப்னு அதீ அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். (மீஸானுல்இஃதிதால்பாகம்: 6, பக்கம்: 33)எனவே இந்தச் செய்தியும் அறிவிப்பாளர் வரிசையின் அடிப்படையில்பின்பற்றுவதற்குரிய தகுதியை இழக்கிறதுமேலும் திருக்குர்ஆன் மற்றும்ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் யாவும் பெண்கள் கற்றுக் கொள்ளலாம் என்றகருத்தையே தருகிறன.இஸ்லாமிய மார்க்கம்கல்வியின் சிறப்பைப் பற்றிப் பேசும் போது ஆண்கள்,பெண்கள் என்று பிரித்துப் பேசவில்லைபொதுவாகவே பேசுகிறதுமேலும்அடிமைகள் நிறைந்த அந்தக் காலத்தில்அடிமைப் பெண்களுக்கும் கூட நபி(ஸல்) அவர்கள் கல்வி கற்றுக் கொடுக்க ஆர்வமூட்டியுள்ளார்கள்.

மூன்று மனிதர்களுக்கு (அல்லாஹ்விடத்தில்இரண்டு விதக் கூலிகள்உண்டுஒருவர் வேதத்தையுடையவர்களில் உள்ளவர்இவர் தமது(சமூகத்திற்கு அனுப்பப்பட்டதூதரையும் முஹம்மதையும் நம்பியவர்.மற்றொருவர் தமது இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும்தமது எஜமானனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும்அடிமைமூன்றாமவர் தம்மிடத்தில் உள்ள ஒரு அடிமைப் பெண்ணுக்குஒழுக்கப் பயிற்சி அளித்துஅந்தப் பயிற்சியை அழகுறச் செய்துஅவளுக்குக்கல்வியைக் கற்பித்துஅதை அழகுறக் கற்றுத் தந்து பின்னர் அவளைஅடிமையிலிருந்து விடுவித்து அவளை மணந்து கொண்டவர்.இம்மூவருக்கும் இரண்டு விதக் கூலிகள் உண்டு” என்று நபி (ஸல்அவர்கள்கூறினார்கள்.அறிவிப்பவர்அபூமூஸா (ரலி)நூல்புகாரீ (97)இது போன்ற செய்திகள் மூலம்நபிகளார் பெண்களை எழுதப்படிக்க ஆர்மூட்டிருக்கிறார்கள் என்பதையும் அதை ஆட்சேபணைசெய்யவில்லை என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம்மேலும் கல்விஇல்லாத காரணத்தால் தான் இன்று பெண்கள் பரவலாகஏமாற்றப்படுகிறார்கள்.படிப்பு அவர்களிடம் இருக்குமானால் அதன் மூலம் அவர்கள் எச்சரிக்கையாகஇருப்பதற்கு உதவும்மேலும் மார்க்க விஷயங்களை அறிந்து கொள்வதற்கும்இவை பேருதவியாக இருக்கும்.எனவே பெண்கள் கல்வி கற்பதை இஸ்லாம் தடை செய்யவில்லைமாறாகஆர்வமூட்டவே செய்கிறது என்பது தெளிவான செய்தியாகும்.

Translate