Jul 14, 2011

திருட்டை ஒழிக்க சிறந்த வழி!


திருட்டை ஒழிக்க சிறந்த வழி!

’27 மூறை திருடியவன்’ மீண்டும் திருட்டுக் குற்றத்தில் கைது!
வங்கிக் கொள்ளையில் ‘பிரபல திருடன்’ கைது!
‘ஒரு சவரன் நகையை திருடுவதற்காக’ மூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை!
இத்தகையை செய்திகளை நாம் சர்வசாதரணமாக இன்றைய காலக்கட்டத்தில் தினசரிகளின் வாயிலாக படிக்கின்றோம். படித்து விட்டு யாரோ யாருடைய பொருளையோ திருடிவிட்டான்! அதனால் நமக்கென்ன என்று நமது அன்றாட வேலையில் மும்முரமாக இருந்து விடுகிறோம். ஆனால் அந்த திருட்டினால் பாதிக்கப்பட்டவர்களோ மிகுந்த மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் உள்ளாகின்றனர். சில வேளைகளில் அவர்களது வாழ்வே நசிந்து நிர்கதிக்குள்ளாகின்றார்கள். அதன் மூலம் சிலர் தற்கொலை கூட செய்து கொள்கின்றனர்.
‘மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகை மற்றும் பணம் திருட்டுப் போனதால் பெற்றோர் தற்கொலை’
இத்தகைய செய்திகள் கூட தினசரி நாளிதழ்களில் நாம் அன்றாடம் படிக்கும் செய்தியாக இருக்கிறது.
எனவே நாம் இத்தகைய செய்திகளை பத்தோடு பதினொன்றாக படித்துவிட்டுப் போகாமல் பறிகொடுத்தவர்களின் மன நிலையில் இருந்து யோசிக்கவேண்டும். ஏனென்றால் இத்தகைய திருடுகளினால் சாதி, சமயம் வேறுபாடில்லாமல் அனைத்து சமுதாய மக்களுமே பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே ஒரு சவரன் நகையை திருவதற்காக கொலை கூட செய்யத் துணிந்து விட்ட அளவிற்கு திருட்டுக் குற்றங்கள் மலிந்து விட்டன. ஒரு முறை திருடியவனே மீண்டும் மீண்டும் திருடுகின்றான் என்றால் நாம் அதைப்பற்றி சற்று கூட யோசிப்பதில்லை. முதல் முறை அவன் திருடியபோதே கடுமையான தண்டணையைக் கொடுத்திருந்தால் அவன் அவ்வாறு மீண்டும் திருடுவதற்கு கூட யோசிப்பானா? அதனால் ‘ஒரு சவரன் நகைக்கான கொலையோ அல்லது மகளின் திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்தவைகள் திருடு போனதற்காக நிகழ்ந்த தற்கொலைகளோ நடைபெறுமா? நடுநிலையில் உள்ள சீர்திருத்த வாதிகள் ஆராய்து சிந்தித்து திருட்டைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும். திருட்டுக் குற்றத்திற்கான தண்டணையை கடுமையாக்காதவரை திருட்டுக் குற்றங்கள் ஓயப்போவதில்லை! திருட்டுக் குற்றங்களுக்காண தண்டணையை மிகக் கடுமையாக ஆக்கியிருக்கும் இஸ்லாமிய நாடுகளைப் பார்தோமேயானால் இது புரியும்.

Jul 12, 2011

கூகுளின் புதிய பயனுள்ள இணையதளம்

இணையத்தில் கூகுள் நிறைய வசதிகளை வாசகர்களுக்கு தருகிறது. பிளாக்கர், யூடியூப், ஜிமெயில், மேப் என கூகுளின் சேவை விரிகிறது.இந்த சேவைகள் அனைத்தையும் கூகுள் வாசகர்களுக்கு இலவசமாக வழங்கி உள்ளது. இந்த வரிசையில் கூகுள் மேலும் ஒரு வசதியை அனைவருக்கும் வழங்கி உள்ளது. அது தான் What do you Love? என்பது.
இந்த தளம் மூலம் ஒரே நேரத்தில் கூகுளின் அனைத்து தளங்களிலும் தேடும் வசதி. இதனால் நாம் ஒவ்வொரு தளத்திலும் சென்று தனித்தனியாக தேடாமல் ஒரே இடத்தில் அனைத்து தளங்களிலும் தேடி வீணாகும் நம் நேரத்தை மிச்சமாக்கலாம்.
இந்த தளத்திற்கு சென்று நீங்கள் தேட விரும்பும் ஒரு குறிப்பிட்ட வார்த்தை நிரப்பி கீபோர்டில் என்டர் கொடுத்தால் போதும். அனைத்து கூகுள் தளங்களிலும் தேடல் முடிவு வந்திருக்கும்.
அதில் உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்து சென்றால் அந்த தளத்தில் தேடல் முடிவு ஓபன் ஆகும்.
இப்படி ஒரே நேரத்தில் கூகுளின் Image, Map, youtube, Gmail, Alert இப்படி பல தளங்களிலும் தேடுதல் முடிவை கொடுக்கும். இதில் கூகுளின் பெரும்பாலான தளங்கள் வரும். இன்னும் பல தளங்கள் சேர்க்கப்படும் என்று கூகுள் அறிவித்துள்ளது.
 
இணையதள முகவரி

 

புதிய காப்பீட்டுத் திட்டம்!.

முந்தைய தமிழக அரசு கலைஞர் காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் ஒரு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நடைமுறை படுத்தி வந்தது. தற்போது, புதிய அரசு இந்த திட்டத்தில் சில மாறுதல்கள் செய்து, மக்கள் அதிக பலனடையும் வகையில் திருத்தும் செய்துள்ளது. கூடிய விரைவில் இது நடைமுறைக்கு வரும் என்றும் அரசின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


இது வரையிலும் இந்த காப்பீட்டு திட்டத்தில், பலன் அடையாத முஸ்லிம்கள் உடனே இந்த திட்டத்தில் தங்களை இணைத்து கொள்ளவும். தமிழகத்தில் உள்ள அணைத்து ஜமாத்களும், முஸ்லிம் இயக்கங்களும் இந்த காப்பீட்டு திட்ட அட்டையை மக்களுக்கு பெற்றுத்தர தக்க உதவிகள் செய்யவும். நோய்கள் பெருகி வரும் இந்த கால கட்டத்தில், பெரும்பாலான மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் மருத்துவ உதவி கேட்டு அலைவதும், மருத்துவ உதவி தேவை என்று மினஞ்சல், மற்றும் கடிதங்களின் மூலம் உதவி கேட்டு அலையும் நிலையை தவிர்த்துவிட்டு, இது போன்று மக்களின் வரிப்பணத்தில் நடைமுறை படுத்தப்படும் இந்த திட்டத்தில் பலன் அடையலாமே!.

முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் முழுமையான புதிய காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த நான் ஆணையிட்டுள்ளேன். தற்போதைய காப்பீட்டுத் திட்டம் 2011, ஜுலை மாதம் 5 ஆம் நாள் உடன் முடிவடைந்தது. எனது அரசால் புதிதாக தொடங்கப்பட இருக்கும் காப்பீட்டுத் திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் வரவேற்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புதிய காப்பீட்டுத் திட்டம் பின்வருவனவற்றை உள்ளடக்கியதாக அமையும் :

1.முந்தைய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு லட்சம் வீதம் வழங்கப்பட்டு வந்த அதிகபட்ச மருத்துவச் செலவு, இந்த புதியத் திட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும் மற்றும் குறிப்பிட்ட சில நோய்களுக்கு 1.50 லட்சம் ரூபாய் வரையிலும் அனுமதிக்கப்படும். அதாவது, நான்கு வருடங்களில் ஒரு குடும்பம் அதிகபட்சமாக 4 லட்சம் ரூபாய்க்கான மருத்துவச் செலவினை பெற இயலும்.


 

எரிமலை: திகிலூட்டும் பல உண்மைகள்!




எரிமலை பத்தி பெருசா நமக்கு ஒன்னுந்தெரியாது. பள்ளிக்கூடத்துல படிக்கும்போது, எரிமைலைன்னா என்ன, உலகத்துல அது எங்கெங்கே இருக்குங்கிற மாதிரியான சில செய்திகள மட்டும் படிச்ச அனுபவமுண்டு. நம்ம ஊருல இல்லைங்கிறதுனால அதப் பத்தி பெருசா அலட்டிக்கிட்டதில்லை இதுவரைக்கும்?!
ஆனா, சில வருடங்களா ஜப்பான்ல (கல்வி நிமித்தமா வந்து) இருக்குறதுனால அப்பப்போ, தொலைக்காட்சியிலேயோ, ஜப்பானிய நண்பர்கள் மூலமாகவோ, இங்குள்ள சில எரிமலைகள் பத்தி சில விஷயங்கள தெரிஞ்சிக்கிட்டதுண்டு. எரிமலையப் பத்தி நெனச்சாலே, ஏதோ திடீர்னு நம்ம வீட்டுக்குப் பக்கத்துல வெடிக்கப் போறது மாதிரி, கொஞ்சம் பயமாவும், திகிலாவும்தான் இருக்கும்.
எரிமலையப் பத்தி நமக்குத் தெரியாத பல உண்மைகள அலசி ஆராயத்தான் இந்தப் பதிவு. கெளம்புங்க போலாம் , எரிமலைப் பதிவுச் சுற்றுலாவுக்கு……
உலகத்துல மொத்தம் (குறைந்த பட்சம்), 1,500 எரிமலைகள் தொடர்ந்து (பல வருடங்களாக)  தீக்குழம்பைக் கக்கிக்கிட்டே இருக்குதாம்.  மாக்மா (நக்மா இல்லீங்க! ) அப்படீங்கிற பாறைக் குழம்புகள், பூமியின் மிருதுவான பகுதிகளை உடைத்துக் கொண்டு வெடிக்கும்போது, பாறைகளின் தீக்குழம்புகளை எட்டுத்திக்கும் வாரி இறைக்கும் ஒரு நிகழ்வையே நாம் எரிமலை என்கிறோம்!
உண்மையில், இந்தப் பாறைக் குழம்புகள், வருடக்கணக்கில் (இருட்டில் பதுங்கியிருக்கும் திருடன் மாதிரி) பூமிக்கு அடியில், நூற்றுக்கணக்கான வருடங்கள்கூட பதுங்கி இருக்குமாம். எதிர்பாராதவிதமாக, திடீரென்று ஒரு நாள் வெடித்துச் சிதறுமாம்.  எரிமலைகள் பற்றி இதுவரை நாம் அறிந்திறாத பல உண்மைகளை தெரிஞ்சிக்கலாம் வாங்க….

தொ(ல்)லைக் காட்சியின் விபரீதங்கள். ஒரு அலசல்!

இன்று சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரினதும் பொழுது போக்கு அம்சமாக எது திகழ்கிறது என்றொரு கேள்வியைக் கேட்டால் டி.வி பார்த்தல் என்ற பதில்தான் அவசரமாக கிடைக்கும்.

புத்தகம் வாசித்தல், குர்ஆன் ஓதுதல், பாடப் புத்தகங்களைப் படித்தல், நல்ல கட்டுரைகளை எழுதுதல், படித்துக் கொடுத்தல், தாய், தந்தைக்கு உதவுதல், தெரிந்தவர்களுக்கு நல்ல செய்திகளைச் சொல்லிக் கொடுத்தல் போன்ற செயல்பாடுகளை பொழுது போக்காக்க் கொண்டவர்கள் மிகச் சிலர் தான் இருக்கிறார்கள்.

வாழ்வில் முன்னேர வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் பலரின் மனதில் ஊசலாடுகிறது. ஆனால் அந்த எண்ணத்தை செயல்படுத்தும் முறைதான் அவர்களுக்குத் தெரியவில்லை. இல்லையில்லை தெரிந்து கொள்ள ஆசைப்படவில்லை.

உலக வரலாற்றில் வெற்றிக் கொடி நாட்டிய எத்தனையோ தலைவர்கள் தங்கள் பொழுது போக்காக எதையும் நினைக்கவில்லை வாழ்க்கை வழிமுறையாக அனைத்தையும் நினைத்து அதன் படி தங்களுக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தைக் கூட வெற்றிப் பாதையின் வழிகாட்டிகளாகப் பயண்படுத்திக் கொண்டார்கள்.

உலகின் வெற்றிப் பாதையில் யாரும் காண முடியாத அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்து அவர்களுக்கு நேர் வழி காட்டி உலகின் கேடு கெட்ட சமுதாயமாக இருந்தவர்களை மனிதப் புனிதர்களாக மாற்றிய நபி பெருமானார் (ஸல்) அவர்கள், இந்த ஓய்வு நேரம் அதனைப் பயன்படுத்துவதின் முக்கியத்துவம் போன்றவற்றைப் பற்றி மிக அழகான முறையில் ஒரு வரியில் விளக்கிக் கூறுகிறார்கள்....

மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகிவிடுகின்றனர். 

1. ஆரோக்கியம். 2. ஓய்வு நேரம். 

(புகாரி 6412)

Jul 11, 2011



அழகிய அபூர்வ பறவையினங்கள்

மனிதன் தோன்றும் முன்னே தோன்றி இன்று பல்லாயிரம் அபூர்வ பறவையினங்கள் மனிதர்களின் பேராசையாலும், சுயநலத்தாலும் மண்ணோடு மண்ணாக அழிந்து போய்விட்டன. ஆனாலும் இன்றும் ஒருசில அபூர்வ பறவையினங்கள் மனிதர்களின் கண்களில் இருந்து தப்பி எங்கேனும் அடர்ந்த காடுகளில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அவற்றில் சில இன்றைய பதிவில்.

Schlegel's Asity (Philepitta schlegeli)

ஆப்பரிக்க கண்டத்தின் ஓரத்தில் உள்ள மடகாஸ்கர் தீவுகளில் இந்த அழகிய பறவையினம் காணபடுகிறது. இந்த பறவை ஒரு அபூர்வ பறவையினமாகும்.
 Schlegel's Asity (Philepitta schlegeli
Schlegel's Asity (Philepitta schlegeli Schlegel's Asity (Philepitta schlegeli
Schlegel's Asity (Philepitta schlegeli

Schlegel's Asity (Philepitta schlegeli

பெண்ணியம் தொடர்பான சில அடிப்படை விஷயங்களை சகோதரர்கள் புரிந்து கொண்டால் நலம் என்று நினைக்கிறேன். பிரச்சனையின் முழுப் பரிணாமத்தை விளங்கிக் கொள்வதற்கு அவை துணைபுரியும். ஏனென்றால், யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் அதைப் பற்றிய அடிப்படையான அறிவு இருக்கின்றதோ, இல்லையோ பேசலாம் என்பது இப்போதெல்லாம் ஒரு புதிய மரபாக ஆகி வருகின்றது. பெண்ணியம் என்றால் என்ன? என்பது பற்றி அனைத்து வாசகர்களும் நன்கு விளங்கி வைத்திருப்பார்கள் என்று நான் கருதவில்லை.

ஆதி காலந்தொட்டே பெண்ணினம் ஏதோ ஒரு வகையான அடக்கு முறைக்கு ஆளாகிக் கொண்டே வந்துள்ளது. இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் மனித வரலாற்றைப் பார்த்தோமென்றால் எப்போதெல்லாம் சத்திய நன்னெறி பின் தள்ளப்பட்டு அசத்திய கோட்பாடுகள் தலையெடுத்தனவோ அப்போதெல்லாம் ஏறக்குறைய எல்லா சமூக அவலங்களும் அரங்கேறியுள்ளன. அவற்றுள்
முன் வரிசையில் பெண் அடக்கு முறை இடம் பிடிக்கின்றது. இறைத்தூதர்கள் வழியாக இடையிடையே இஸ்லாமிய நன்னெறி புத்துயிர் பெற்ற போதெல்லாம் பெண்ணுக்கு அவளுடைய இயல்பான உரிமை வழங்கப்பட்டு வந்துள்ளது.

வரலாற்றில் ஆணித்தரமாக பதிவாகியுள்ள செய்திகளின் அடிப்படையில் பார்த்தோமென்றால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெண்ணியக் கொள்கை தலையெடுத்தது. பெண் விடுதலைக்கான வாசல் திறந்தது, என்பதை படிக்கலாம். ஆனால், உண்மை நிகழ்வுகளை அலசிப் பார்த்தோமென்றால் பெண்ணுக்கான உண்மையான சுதந்திரம் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இஸ்லாமின் மூலமாகத்தான் கிடைத்துள்ளது என்பதை ஒப்புக் கொள்ளலாம்.

ஒவ்வொருவரும் தன்னுடைய சொந்த ஊரை, தான் பேசும் மொழியை, தான் பின்பற்றும் சமய நெறியை விரும்பி நேசிக்கத் தான் செய்கிறார்கள். எல்லை கடந்து போய் சிலரிடம் இது வெறியாக மாறிவிடுவதும் உண்டு! அத்தகைய ஒரு சமயப்பற்றினால், நாம் இவ்வாதத்தை முன் வைக்கவில்லை. மனிதகுலத்திற்கான விடுதலையே இஸ்லாமின் மூலமாதத்தான் சாத்தியம் என்று நாம் கூறுகிறோம். வரலாற்று அரங்கில் குறைந்த கால கட்டம் தான் என்றாலும் அதைப் பரீட்சித்துக் காட்டி இருக்கிறோம். மனித குல விடுதலையே இஸ்லாமின் மூலமாகத் தான் என்னும் போது பெண் இனமும் கண்டிப்பாக அதில் அடங்கத்தானே செய்யும்!

சமவுரிமை, சமத்துவம் என்றெல்லாம் பேசும் இன்றைய பெண்ணிய சிந்தனை பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறப்பெடுத்தது. கற்பனைச் சமூகவியலாளரான சார்லஸ் ப்யூரியே என்பவர் தாம் முதலில் பெண்ணியம் (Feminism) என்ற சொல்லை 1837 இல் கையாண்டார். அதன் பின்பு அது தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டே சென்று இன்று விமர்சனங்களின் விளிம்பில் வந்து நிற்கின்றது.

Jul 4, 2011


அணு உலைகளின் அறிவியல் விளக்கங்கள்



Post image for அணு உலைகளின் அறிவியல் விளக்கங்கள்


in அறிவியல்அணு உலைகளின் உள்வடிவமைப்பு மற்றும் இயக்கம்; ஒரு சிறுகுறிப்பு!யுரேனியம் மற்றும் ப்ளூட்டோனியம் போன்ற அணுசக்தி வேதியற்பொருட்களிலிருந்து மின் உற்பத்திசெய்ய, அவற்றை அணு உலைகளில் அடைத்துவைத்து பயன்படுத்துவார்கள். அணு உலைகளில் பல வகைகள் உண்டு. சமீபத்திய, பெரும்பாலான  நாடுகளில் மின்னுற்பத்திக்காக பயன்படுத்தப்படுவது கொதிக்கும் தண்ணீர் அணுஉலை அல்லது Boiling water reactor, BWR என்னும் ஒருவகை அணுஉலையே! ஜப்பானில் ஃபுகுஷிமாவிலும் இதுதான் பயன்படுத்தப்படுகிறது! இது 1950களில் அமெரிக்காவின் GE/ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. கொதிக்கும் தண்ணீர் அணு உலை (Boiling water reactor, BWR)(மேலிருக்கும் படத்தில் இடதுபக்கமிருக்கும்) அணுஉலையில், யுரேனியம் வேதிப்பொருள் குழாய்போன்ற கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டு குளிர்ந்த நீருக்குள் மூழ்கவைக்கப்பட்டிருக்கும். யுரேனியத்திலிருந்து வெளியாகும் அணுசக்தியானது வெப்பத்தை உருவாக்கி, அதனைச்சுற்றியுள்ள குளிர்ந்தநீரை ஆவியாக்கும். அந்த ஆவியானது மின் உற்பத்தி செய்யும் டர்பைன் கருவியை இயக்கும்/சுழலச்செய்து மின் உற்பத்தியை தொடங்கும்/தூண்டும். டர்பைனை சுழலச்செய்தபின், அந்த நீராவியானது ஒரு கண்டென்சரின் உதவியுடன் குளிர்விக்கப்பட்டு மீண்டும் நீராகிவிடும். இந்த நீரானது மீண்டும் யுரேனியம் இருக்கும் அணு உலைக்குள் செலுத்தப்படும். இப்படியொரு சுழற்சியினால், யுரேனியத்திலிருந்து தொடர்ந்து 24 மணி நேரமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்! நான் சொன்ன விளக்கத்தை பின்வரும் காணொளியில தெளிவா காமிக்கிறாங்க, பாருங்க…..

இஸ்லாத்தில் ஆடைகள்


இஸ்லாத்தில் ஆடை அணிவதற்கும் பல வழிமுறைகள் கூறப்பட்டிருக்கின்றன, அவைகளை நாமும் பேணி நடப்பதினால் நாம் அணியும் ஆடையும் கூலிபெற்றுத்தரும் நன்மையாக கருதப்படும், அவைகள் பின்வருமாறு:
1. அன்னிய மதத்தவர்கள் தங்களின் மதத்தை அடையாளம் காட்டுவதற்காக அணியும் ஆடைகளை அணியக்கூடாது.
யார் இன்னொரு கூட்டத்திற்கு ஒப்பாகின்றாரோ அவர் அவரைச்சேர்ந்தவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம் :அபூதாவூத்: 4031) 
2. ஆண், பெண் அணியும் ஆடையைப் போன்றோ, பெண் ஆண், அணியும் ஆடையைப் போன்றோ அணியக்கூடாது.
பெண் அணியும் ஆடையைப்போன்று அணியக்கூடிய ஆணையும், ஆண் அணியும் ஆடையைப்போன்று அணியக்கூடிய பெண்ணையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். (ஆதாரம் : அபூதாவூத்.)
3. பெருமைக்காக ஆடை அணியக்கூடாது
யார் (இவ்வுலகில்) பெருமைக்காக ஆடை அணிகின்றாரோ அவருக்கு அல்லாஹ் மறுமையில் இழிவான ஆடையை அணிவிப்பான். பின்பு அதில் நெருப்பு பிடித்துவிடும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். (ஆதாரம் : அபூதாவூத்)

Blog Archive

Translate