Jun 28, 2011


தமிழகத்தில் புதிய அமைச்சராக ஏ.முகமது ஜான் நியமனம்!

ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ முகம்மது ஜான் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 29ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இவரது பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத்துறைக்கு ஏற்கனவே அமைச்சராக நியமிக்கப்பட்ட மரியம் பிச்சை சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனால் தமிழக அமைச்சரவை முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் இல்லா அமைச்சரவையாக இதுவரை இருந்து வந்தது. தற்போது முகம்மது ஜான் அவர்கள் பொறுப்பை ஏற்பதால், அதிமுக அமைச்சரவையில் இடம் பெற்று இருக்கும் ஒரே முஸ்லிம் அமைச்சர் இவர் மட்டுமே ஆவார். ஆனால் கடந்த தி.மு.க அமைச்சரவையில் இரண்டு முஸ்லிம்கள் அமைச்சர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

images?q=tbn:ANd9GcSLPCBNbWvc_uO5waYoUrvknsO4VyYqfq_UzLR6ExL-fta3zQkv

மொபைல் போன் தொடர்ந்து பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் கதிர்களால் நம் மூளை பாதிக்கப்படும் எனவும் அதெல்லாம் இல்லை எனவும் எதிர்மறையான விவாதங்களும் அது குறித்த ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இருப்பினும் மொபைல் இயங்கும் போது கதிர்வீச்சு இருப்பது என்னவோ உண்மைதான். எனவே அது பாதிப்பினை ஏற்படுத்துகிறதா என்ற விவாதத்திற்குள்ளே போகாமல், சற்று பாதுகாப்பாகப் பயன்படுத்தலாமே.
இயலுமானால் உங்கள் உடம்பி லிருந்து மொபைல் போனைச் சற்று தூரத்திலேயே வைத்துப் பயன்படுத்தவும். இதனால் கதிர் வீச்சு உங்கள் உடம்பை அடைவது குறையும். இதற்கு ஹேண்ட்ஸ் பிரீ செட்கள் கிடைக்கின்றன. போனைத் தள்ளி வைத்து அதனை வயருடன் இணைந்த அல்லது வயர் இல்லாமல் இணைப்பு ஏற்படுத்திப் பேசலாம், அழைக்கலாம்.
மொபைல் போனை அதிகம் மூடி வைக்க வேண்டாம். இதனால் சிக்னல்கள் வந்தடைவது சற்று தடுக்கப்படும். சிக்னல்களை எப்படியும் அடையவேண்டும் என்ற முயற்சியில் போனில் கதிர்வீச்சு அதிகமாகும்.


தொலைபேசியும் இஸ்லாமிய பெண்களும்*


முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும், நம் சகோதரிகளை
நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை
முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே
செய்ய வேண்டும்
சமீபத்தில் என்னைக் கலங்க வைத்த ஒரு செய்தி, எனக்கு படித்துத் தந்த ஒரு
பிரபல்யமான ஆசிரியர் ஒருவரின் மகள் ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஒரு பையனுடன் ஓடி
விட்டதுதான். அந்த இரவு முழுவதும் என்னால் நித்திரை கொள்ள முடியாமல்
போய்விட்டது.
எம‌து ஊரில் இப்ப‌டி எல்லாம் ந‌ட‌க்குது என்று என் உற‌வின‌ர் ஒருவ‌ருட‌ன்
மிக‌வும் க‌வ‌லைப்ப‌ட்டு பேசிய‌ போது அவ‌ர் சொன்ன‌ விட‌ய‌ங்க‌ளைக்
கேட்டால்...இலங்கை முழுவதும் என்றுமில்லாத வகையில் தற்சமயம் அதிக அளவில்
முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும்
நிகழ்ந்து வருகின்றது.
இத‌ற்கான‌ முழுப்பொறுப்பையும் பெற்றோர் ஏற்க‌ வேண்டி இருக்கிற‌து.
*இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்:*
1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவணிக்க தவறுவது.
2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற
சாதனங்களை வாங்கி கொடுப்பது. 

Translate