Feb 24, 2011



உங்கள் அடுத்த கம்ப்யூட்டராகும் “டேப்ளட் பிசி”


Tablet_PC-nokia.jpg
கம்ப்யூட்டர் உலகம் தற்போது நான்கு முனைச் சந்திப்பில் நின்று கொண்டிருக்கிறது. எந்தப் பக்கம் எட்டு எடுத்து வைப்பது என்று புரியாமல் உள்ளது. இன்றைக்கு பலருக்கு, முதல் கம்ப்யூட்டர் எது என்றால் அது பெர்சனல் கம்ப்யூட்டராக இல்லை. ஸ்மார்ட் போனாகத்தான் உள்ளது. ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் வீட்டில் அல்லது அலுவலகத்தில் ஒரு மேஜையில் அமர்ந்து கொண்டு செயல்படுகிறது. ஆனால் ஸ்மார்ட் போன்கள் நாம் எங்கு சென்றாலும் உடன் வருகின்றன. அதன் மூலம் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. எவ்வளவுதான் திறனுடன் செயல்பட்டாலும், ஒரு ஸ்மார்ட் போன், பெர்சனல் கம்ப்யூட்டராக முழுமையாக இடம் பெறாது. எனவே தான் பெர்சனல் கம்ப்யூட்டருக்கும், ஸ்மார்ட் போனுக்கும் இடையே ஒரு சாதனம் இரண்டின் பயன்பாட்டினையும் முழுமையாகத் தரும் வகையில் தேவையாய் இருந்தது. அந்த இடத்தில் டேப்ளட் பிசி வந்து நம் தேவைகளை நிறைவு செய்து வருகிறது. இதனால், கம்ப்யூட்டர் பயன்பாடு தற்போது இரு வகை கணினிகளில் மேற்கொள்ளப்பட்டு, எதில் தொடர்வது என்ற கேள்விக் குறியுடன் தொடர்கிறது. ஆனால், அண்மையில் லாஸ்வேகாஸ் நகரில் நடந்து முடிந்த தகவல் தொழில் நுட்பக் கருத்தரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட பட்டயக் கணிப்பொறிகளைக் (Tablet PC) காண்கையில், அதன் மாடல் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்கையில், இவை மொத்தமாக மக்களை சென்றடையும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றே தெரிகிறது. எனவே நம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், அதன் சில அம்சங்களை இங்கு பார்க்கலாம்.
1. பழைய மாடலில் மாற்றம்: தற்போதைய டேப்ளட் பிசி இதன் முன்னோடிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. முதலில் ஒரு டேப்ளட் பிசி, லேப்டாப் கம்ப்யூட்டரில், சுழலும் திரை ஒன்றை இணைத்தது போல வடிவமைக்கப்பட்டது. ஆனால் மக்களிடம் இவை எடுபடவில்லை.

புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்




வாய்தொண்டை,நுரையீரல்வயிறுசிறுநீரகம்,சிறுநீர்ப்பை போன்ற உடல்பாகங்களால் புற்றுநோய்ஏற்பட புகையிலைகாரணமாகிறது.· புகையிலையினால்ஏற்படுகிற வாய்ப்புற்று நோய்கொண்ட நோயாளிகள்,உலகிலேயேஇந்தியாவில் மிகஅதிக எண்ணிக்கையில்உள்ளனர்.· இந்தியாவில்ஆண்கள்மற்றும் பெண்களில் ஏற்படும் புற்றுநோய்களுக்குமுறையே56.4% மற்றும் 44.9% புகையிலை காரணமாயிருக்கிறது.· 90%கும் அதிகமான நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிறநுரையீரல் நோய்களைபுகைபிடித்தல் ஏற்படுத்துகிறது.இதயம் மற்றும் இரத்தக்குழாய் நோய்கள்மாரடைப்பு,மார்புவலிஇதயக்கோளாரினால் ஏற்படும் திடீர் மரணம்ஸ்ட்ரோக்(மூளை பாதிப்பு)கால்களில் ஏற்படும் காங்கரின் எனப்பட்ட புறஇரத்தக்குழாய் நோய்கள் போன்றவை ஏற்பட புகையிலைகாரணமாகிறது.· இந்தியாவில் 82% நாட்பட்ட நுரையீரல் சுவாசக்குழாய்அடைப்பு நோய் ஏற்படபுகைப்பிடித்தல் காரணமாய்அமைகிறது.· புகையிலை மறைமுகமாக நுரையீரல்டியூபர்குளோஸிஸினை (டி.பி) ஏற்படுத்துகிறதுஎப்போதும்புகைபிடிப்பவர்களுக்குடியூபர்குளோஸிஸ் ஏற்படும் வாய்ப்புமூன்று மடங்கு அதிகம் ஆகும்சிகரெட் அல்லது பீடிகளைஅதிகளவு புகைபிடிப்பவர்களுக்குடியூபர்குளோஸிஸ்ஏற்படும் வாய்ப்பு மிகவும் அதிகம்.· புகைத்தல்/புகையிலை திடீரென இரத்தஅழுத்தத்தினை அதிகரிக்கிறது மற்றும் இதயத்திற்குசெல்லும் இரத்தத்தின் அளவினை குறைக்கிறது.· புகையிலைகால்களுக்கு செல்லும் இரத்தஓட்டத்தையும் குறைக்கிறது. கால்களில்கரங்களில்காங்கரின் எனப்படும் கால் மாமிசத்தை அரித்துவிடும்புண்களை ஏற்படுத்தலாம்.· புகையிலைஉடல் முழுவதிலும் உள்ள தமனிஎனப்படும் இரத்தத்தை ஏந்திச்செல்லும் இரத்தக்குழாய்சுவர்களை சேதப்படுத்துகிறது.

பெண்கள் பேண்ட் அணியலாமா




ஆண்கள் பெண்களைப் போலவும் பெண்கள் ஆண்களைப் போலவும் நடக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
5885 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போல ஒப்பனை செய்துகொள்பவர்களையும்பெண்களில் ஆண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும் சபித்தார்கள்.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புஹாரி 5885
இது ஆடையை மட்டும் குறிப்பதல்ல. எல்லா வகையிலும் ஒரு பாலரைப் போல் இன்னொரு பாலர் இருக்கக் கூடாது என்று பொதுவாகக் கூறும் ஹதீஸ் ஆகும். இதில் ஆடையும் அடங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் இதைச் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆண்கள் அணியும் எந்த ஆடையையும் பெண்கள் அணியக் கூடாது என்று பொருள் கொள்வதா?

காதல் பற்றி இஸ்லாத்தின் நிலை என்னவிரும்பிய வேற்று மதப் பெண்ணை இஸ்லத்திற்கு மாற்றி பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்யலாமா?
உங்கள் கேள்வியில் மூன்று விஷயங்கள் உள்ளன.
காதலிக்கலாமா என்பது முதல் விஷயம். காதல் என்பதற்கு ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்புதல் என்றோ அல்லது ஒரு பெண் ஒரு ஆணை விரும்புதல் என்றோ பொருள் கொண்டால் அதற்கு மார்க்கத்தில்அனுமதி உண்டு. இன்னும் சொல்லப் போனால் விரும்பித் தான் திரும்ணமே செய்ய வேண்டும்.
இதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. வலிமையான ஒரே ஒரு ஆதாரத்தை மட்டும் இங்கே எடுத்துக் காட்டுகிறோம்.
காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோசாடை மாடையாக மணம் பேசுவதோஉங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!
திருக்குர்ஆன் 2:235
கணவனை இழந்த பெண்கள் மற்ற பெண்களை விட அதிகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டவர்கள். அவர்கள் அலங்காரம் செய்யக்கூட அவர்களுக்கு அனுமதி இல்லை. கனவனை இழந்து இத்தாவில் இருக்கும் போது அவர்களைத் திருமணம் செய்து கொள்வதாக அவர்களிடம் ஆண்கள் வாக்களிக்கக் கூடாதுஆனாலும் சாடைமாடையாக் பேசலாம் என்று அல்லாஹ் கூறுகிறான். இத்தாவில் இல்லாத மற்ற பெண்களிடம் ஆண்கள் பேசலாம் என்பதும் தந்து விருப்பத்தை அவர்களிடம் தெரிவிக்கலாம் என்பதும்திருமணம் செய்து கொள்வதாக வாக்களிக்கலாம் என்பது இந்த வசனத்தில் அடங்கியுள்ளது.
இது தான் அனுமதிக்கப்பட்ட காதல் என்பது.
இதைக் கடந்து திரும்ணத்துக்கு முன் ஒரு பெண்ணுடன் தனித்திருப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

Feb 21, 2011


மூட்டுவலி‌யினா‌ல் முட‌ங்க வே‌ண்டா‌ம்


மு‌ன்பெ‌ல்லா‌ம் கா‌ல் வ‌லி, மு‌ட்டி வ‌லி எ‌ன்று பெ‌ரியவ‌ர்க‌ள் தா‌ன் புல‌ம்புவா‌ர்க‌ள். ஆனா‌ல் த‌ற்போதெ‌ல்லா‌ம் 30 வயதை‌க் கட‌ந்து‌வி‌ட்டாலே அனுபவ‌த்தை‌ ‌விட இதுபோ‌ன்ற வ‌லிக‌ள்தா‌ன் அ‌திக‌ம் வரு‌கி‌ன்றன.
இ‌‌ப்போ‌திரு‌க்கு‌ம் உணவு முறை, உட‌ல் எடை போ‌ன்றவ‌ற்றா‌ல் இளைஞ‌ர்களு‌க்கு‌க் கூட மூ‌ட்டு வ‌லி வர அ‌திக வா‌ய்‌ப்புக‌ள் உ‌ள்ளன எ‌ன்று ஆரா‌ய்‌ச்‌சிக‌ள் கூறு‌கி‌ன்றன.
பெரு‌ம்பாலானவ‌ர்களு‌க்கு மூ‌ட்டு வ‌லி வருவத‌ற்கு உடல் எடை அதிகமாக இருப்பதே முக்கியக் காரணமாகும். கால்சியம் சத்துக் குறைவு, நோய் எதிர்ப்புத் தன்மை இல்லாமை, உடலில் தோன்றும் ரசாயன மாற்றங்கள், இளம் வயதில் உடற்பயிற்சி செய்யாமை போன்றவையும் மூட்டுவலிக்கு காரணமாக அமைகின்றன.
மூ‌ட்டு வ‌லி வ‌ந்த ‌பிறகு அத‌ற்கு ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்வதை ‌விட, வராம‌ல் தடு‌க்க மு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்கையாக இரு‌ப்பதே ‌சிற‌ந்தது.
உ‌ண்மை‌யிலேயே மூ‌ட்டு வ‌லியா?
மு‌ட்டி வ‌லி‌த்தாலே அது மூ‌ட்டு வ‌லி எ‌ன்று‌ ‌நினை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டா‌ம்.
மூட்டுகளில் கடுமையான வலியு‌ம் வீக்கமும் காணப்படும். மூட்டுகள் உஷ்ணமாக இருக்கும். மூ‌ட்டு வ‌லி ஏ‌ற்ப‌ட்டா‌ல் உடல் சோ‌ர்வு அசதி, கா‌ய்‌ச்ச‌ல் போன்ற அறிகுறிகளு‌ம் காணப்படும்.
மூ‌ட்டு வ‌லிகளு‌க்கு உடனடியாக ‌‌சி‌கி‌ச்சை பெற வே‌ண்டியது அவ‌சிய‌ம். அ‌வ்வாறு இ‌ல்லையெ‌னி‌ல் மூ‌ட்டு வ‌லி ‌தீ‌விரமடையு‌ம். ‌பிறகு கா‌ல்களை ‌நீ‌ட்ட‌க் கூட முடியாத ‌நிலை ஏ‌ற்படலாம்.

மூ‌ட்டு வ‌லி ஏ‌ற்படாம‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், நமது அ‌ன்றாட பழ‌க்க வழ‌க்க‌ங்களை மா‌ற்‌றி‌க் கொ‌ண்டாலே‌ப் போ‌து‌ம். அதாவது, நன்கு நேராக நிமிர்ந்து, உட்கார, நிற்க பழக வேண்டும். இ‌ந்த தவறை‌த்தா‌ன் பெரு‌ம்பாலானவ‌ர்க‌ள் செ‌‌ய்‌கிறா‌ர்க‌ள். அதாவது, கூ‌ன் போ‌ட்டபடி அம‌ர்‌வதாலேயே பெரு‌ம்பாலானவ‌ர்களு‌க்கு மூ‌ட்டுக‌ள் பல‌மிழ‌க்‌கி‌ன்றன.
நிற்கும்பொழுது பாதங்களை சற்று அகற்றி வைத்து நிற்பதால் உடல் எடை சமமாகப் பரவும். தோள்களை சரியான நிலையில் வைப்பதாலும், முதுகுத் தண்டை நிமிர்த்தியபடி உட்காருவதாலும் நல்ல பலன் கிடைக்கும்.
கு‌திகா‌ல் செரு‌ப்புகளை‌ப் பய‌ன்படு‌த்துவதை‌ பெ‌ண்க‌ள் தவிர்க்க வேண்டும். இது இடுப்பு மற்றும் கால் மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
நடக்கும் போதும், உடற்பயிற்சி செய்யும்போதும் அதற்கென உள்ள காலணிகளைப் பயன்படுத்த வேண்டும். கண்டிப்பாக வருடத்திற்கு ஒருமுறை காலணிகளை மாற்ற வேண்டும்.
எந்த வேலையையும் ஒரேடியாக செய்யாமல் சிறிது இடைவெளி விட்டு செய்யலாம். அலுப்பு தோன்றாமல் இருக்க தங்களுக்குப் பிடித்த பாடல்களை கேட்டுக்கொண்டே வேலை செய்யலாம். அ‌திக நேர‌ம் உ‌ட்கா‌ர்‌ந்தபடி ப‌ணியா‌ற்றுபவ‌ர்க‌ள், அ‌வ்வ‌ப்போது எழு‌ந்து காலார நட‌ந்து‌வி‌ட்டு வ‌ந்து உ‌ட்கா‌ர்‌ந்து வேலைகளை‌ச் செ‌ய்யலா‌ம்.


அன்னாசிப் பழம்








அன்னாசி பழம் என்றாலே அனேகருக்கு பிடிக்காத ஒன்று. இது அதிக உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியது. இதனால் உடலுக்கு ஊறுவிளைவிக்கும் என்ற நம்பிக்கை மக்கள் கொண்டுள்ளனர். உண்மையில் இது உடலுக்கு மிக நல்லது. இது அதிக உஷ்ணத்தை விளைவிக்க கூடியது அல்ல,

அன்னாசி பழத்தில் வைட்டமின் "B"  கூட்டு அதிக அளவில் உள்ளது. அது உடலில் இரத்தத்தை விருத்தி செய்யும், உடலுக்கு பலத்தை தரும். பல வியாதிகளை குணமாக்கும் அரிய மருந்தாக இயற்கை வைத்தியத்தில் பயன் படுகிறது.

இரும்பு சத்து (ஹீமோகுளொபின்) குறைவாக உள்ளவர்களுக்கு இது சிறந்த டானிக் போன்றது. நன்றாக பழுத்த அன்னாசியை சிறு துண்டுகளாக்கி வெய்யிலில் தூசி படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்துக் கொண்டு, தினமும் படுக்க செல்லும் முன் அரை மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஐந்து வற்றல்களை ஊறவைத்து, பின் படுக்கச் செல்லும் முன் ஊறிய வற்றல்களை நன்கு மென்று தின்றுவிட்டு பாலை குடித்து விட வேண்டும்.

இது போல் 48 நாட்கள்(ஒரு மண்டலம்) தொடர்ந்து செய்தால் உடலில் நல்ல ரத்தம் உற்பத்தியாகும். உடல் சக்தி பெறும். பித்த சம்பந்தமான கோளாறுகள் நீங்கும். பெண்களுக்கு எற்படும் வெள்ளை படுதல் குணமாகும். கோடையில் அன்னாசி சர்பத் சாபிட நாவறட்சி அகன்று தாகம் தணியும்.


தினம் ஒரு கப் காரட் ஜூஸ்


இதை விட சிறந்தது இல்லை எனும் அளவு காரட் ஜூஸ் சிறப்பு வாய்ந்தது.
  • உயிர் சத்துகள் நிறைந்த காரட்டை பச்சையாக உண்பது மிக நல்லது. செலவு குறைந்த சத்துணவு இது. புதிய காரட்டுகளை மிக்ஸியில் உடனுக்குடன் அரைத்து அருந்துவதே நல்லது.
  • குழந்தைகள், முதியோர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் யாவருக்கும் நல்லது.
  • காரட் சாறுடன் எலுமிச்சம் பழமும் புதினாவும் கலந்து உப்பு சேர்க்காமல் அருந்தினால் மலச்சிக்கல் மாறும்.
  • காரட்டில் அதிக அளவு காணப்படும் வைட்டமின் A கண்களுக்கு நல்லது. தினமும் அருந்தினால் கண் எரிச்சல், தளர்ச்சி நீங்கி பார்வை ஒளி பெறும்.
  • ஞாபக சக்தி அதிகரிக்கும், புத்திகூர்மை உண்டாகும். காரட் சாறுடன் ஏழு எட்டு பாதாம் பருப்புகள் உண்டு வந்தால், மூளை விழிப்புடன் இருக்கும். மூளைக்கு நல்லது. பைத்தியம் குறையும்
  • முடி கொட்டாது நீளமாக வளரும்.
  • வைட்டமின் B அதிகம் உள்ளது. எளிதில் ஜீரணமாகும்.
  • நெஞ்சு எரிச்சலுக்கு தினமும் காரட் சாறு பருகுவது நல்லது. வாய்வு பிடிப்பு நீங்கும். வயிற்றை சுத்தமாக்கும்.
  • குடல்வால் நோய் வராது. கல்லீரல், மற்றும் வயிற்றில் கற்கள் அல்லது புண்கள் இருந்தால் காரட் ஜூஸ் நல்ல மருந்து.
  • இதயத் துடிப்பைச் சீராக்கும். இரத்தம் உறைந்து இதய அடைப்பு ஏற்படுவதிலிருந்து காக்கும்.
  • மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக தினமும் காரட் சாறு அருந்துவது நல்லது.
  • இரத்தப் புற்றுக்கு தினமும் காரட் சாறு அருந்த ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
  • தலை சுற்று, மயக்கம் வராமல் காக்கும்

Feb 14, 2011


பயனுள்ள கல்வித்தளங்கள்


பொது அறிவு Wikipedia - Free Encyclopedia -சிறந்த பொது அறிவுக் களஞ்சியம்
விக்கிபீடியா
களஞ்சியம்
Internet public library
How Stuff work? -ஒவ்வொரு பொருட்களும் எப்படி வேலை செய்கின்றன? தெரிந்து கொள்ளுங்கள்
MIT Open Course wares - free courses
open learn
Learn that .com - Learn something hereஎதையாவது கற்றுக்கொள்ள வேண்டுமா?
Bartleby.com-e-books
about.com-What You Need to Know about?-எதைப் பற்றியாவது தெரிந்து கொள்ள வேண்டுமா?
Librarian's Internet Index
Oddee.com
Philosophy class
தமிழ் நாடு அரசு பாடநூல் தமிழக அரசு பள்ளி பாட நூல்களை பதிவிறக்கம் செய்ய
Vidya online ஏராளமான புத்தகங்கள்,சலனப்படங்கள்,பாடங்கள் நிறைந்த கல்வித்தளம்.
தமிழ் நாடு பள்ளிக் கல்வித் துறை  வழங்கும்  இணைய கல்வி


மழலைக்கல்வி
primary-education
www.knowledgeadventure.com/
Surfing the Net with Kids
mathsisfun.com
a mathsdictionaryforkids
a plus math.com
funbrain.com


மூளை வளர என்ன சாப்பிடலாம்?


ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? எதிலும் அதிக கவனத்துடன் ஈடு பட முடியவில்லையா? மூளை சரியாக செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம்.

காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.

ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம்

மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.சைவ உணவுக்கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

Feb 5, 2011



ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்!



ATM (Automatic Teller Machine)
ஏ.டி.எம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பற்றிய தகவல்கள் எல்லாம் மிகவும் சுவாரஸ்யமானது.


கட்டுக்கட்டாக பணத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு இப்போதெல்லாம் பஸ்சில் பதட்டப்பட்டுக்கொண்டே யாரும் பயணிப்பதில்லை. காரணம் ஏடி. எம் அட்டைகள்.



வங்கியில் கணக்கை ஆரம்பித்த அனைவருக்குமே ஒரு அட்டை கிடைக்க தற்போது எல்லா வங்கிகளும் வசதி செய்துள்ளன. எப்போது தேவையோ அப்போது எடுத்துக் கொள்ளலாம் எனும் நிலையும், எல்லா தெருக்களுக்குள்ளும் நுழைந்துவிட்ட தானியங்கி இயந்திரங்களும் பணத்தை தூக்கிச் சுமக்கும் பணியை குறைத்திருக்கின்றன.



நாம் பணம் தேவைப்படும் போது ஏ.டி. எம் முன்னால் சென்று நிற்கிறோம், நமது அட்டையை உள்ளே நுழைக்கிறோம். சங்கேத எண்ணை அமுக்குகிறோம். நம்முடைய கட்டளைக்கு ஏற்ப பணம் கிடைக்கிறது. திருப்திப்பட்டு விடுகிறோம்.



Automatic Teller Machine என்பதன் சுருக்கம் தான் ATM. நம்முடைய அட்டையில் 16 எண்கள் கொண்ட ஒரு எண் இருக்கும். இது நம்மைப் பொறுத்தவரையில் ஒரு சாதாரண எண். ஆனால் இதன் ஒவ்வொரு எண்ணிற்கும் தனித்தனி அர்த்தங்கள் உண்டு.



முதல் ஆறு எண்கள் அட்டை எந்த வங்கியிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது என்பதைக் குறிக்கும். அதற்கடுத்த ஒன்பது எண்களும் சேவை வழங்கு நிறுவனங்களின் விருப்பத்தைப் பொறுத்த எல்லைக்குள் இருக்கும். கடைசி எண் ஒரு ரகசிய எண். அதுதான் உங்கள் அட்டை பயன்படுத்தக் கூடியதா இல்லையா என்பதைச் சொல்லும்.



மாஸ்டர்கார்ட் எண்கள் ஐந்து எனும் எண்ணில் ஆரம்பிக்கும், விசா எண்கள் நான்கு எனும் எண்ணில் ஆரம்பிக்கும் என்பது ஒரு சிறு சுவாரஸ்யத் தகவல்.



அட்டைகளை இரண்டு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். ஒன்று கிரடிட் கார்ட் எனப்படும் கடனட்டைகள். இன்னொன்று டெபிட் கார்ட் அல்லது செக் கார்ட். கடனட்டையில் நாம் செலவழிக்கும் பணத்தை மாதம் ஒருமுறை செலுத்தினால் போதும். செக் கார்ட் மூலம் செலவழிக்கும் பணம் நம்முடைய வங்கிக் கணக்கிலிருந்து உடனே கழிக்கப்பட்டு விடும்.



ஏடிஎம் முன்னால் சென்று அட்டையை உள்ளே செலுத்தி நம்முடைய சங்கேத எண்ணைக் குறிப்பிட்டபின் நமக்கு எவ்வளவு பணம் தேவை என்பதைக் குறிப்பிட்டு பொத்தானை அமுக்குகிறோம். நம்முடைய அட்டையின் பின்னால் இருக்கும் மேக்னட்டிக் ஸ்ட்ரைப் நம்முடைய அட்டையின் எண்ணை மென் குறியீடாக்கி உள்ளே அனுப்பும். அதற்குப் பயன்படும் இடம் தான் கார்ட் ரீடர் எனப்படும் நாம் அட்டையை உள்ளே நுழைக்கும் இடம். அப்போது கட்டளை ஏடிஎம் முனையிலிருந்து சுவிட்ச் என அழைக்கப்படும் கணினி மென்பொருளுக்குள் நுழைகிறது. இங்கே இரண்டு விதமான சோதனை வளையங்கள் இருக்கின்றன. முதலில் நாம் பயன்படுத்தும் அட்டை சரியானது தானா ? அதற்கு நாம் கொடுத்த சங்கேத எண் சரியானது தானா என்பதைச் சரிபார்க்கும் சோதனை.

பயனுள்ள வலைத்தள முகவரிகள்: மருத்துவம்



பொது மருத்துவ தளங்கள்:

healthopedia.com/
webmd.com/
health.discovery.com/
health.nih.gov/
mercksource.com/

medlineplus.gov/
medicinenet.com
en.wikipedia.org/wiki/Health
cdc.gov/datastatistics/
health.yahoo.com/

goodhealthnyou.com/
menshealth.digitaltoday.in/menshealth/
cnn.com/HEALTH/
webhealthcentre.com/
health.howstuffworks.com/

aolhealth.com/health
health.ninemsn.com.au/
dir.yahoo.com/Health/
nhsdirect.nhs.uk/help/
Disease Index

online-medical-dictionary.org/
wrong diagnosis.com
e health md.com
family doctor.org
nccam.nih.gov

yourtotalhealth.ivillage.com/
intelihealth.com/
my.clevelandclinic.org
lib.uiowa.edu/hardin/md/
healthfinder.gov/

mayoclinic.com/
medhelp.org/
noah-health.org/
emedicinehealth.com/
medicdirect.co.uk/
http://kidshealth.org/

 ஹாய் நலமா?


     குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்


    
  • கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின்றி கண்ட கண்ட மாத்திரைகள் சாப்பிடுவது கருவில் இருக்கும் குழந்தைக்கு நிச்சயம் பாதிப்பு உண்டாக்கும்.
  • சிகரெட், போதைப் பொருட்கள் தாய் உபயோகிப்பது கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கும்.
  • தாய் உண்ணும் உணவில் போதிய சத்துக்கள் குறைவு, மன அழுத்தம் வயிற்றிலிருக்கும் குழந்தையை பாதிக்கும்.
  • குழந்தகளின் பால் புட்டிகளை நிப்பிள்களை கொதிக்கும் நீரில் போட்டு கிருமி நீக்கம் செய்து பால் நிரப்பிக் கொடுக்கவும். வாரம் ஒரு முறை நிப்பிளை மாற்றவும்
  • மீதம் வைத்த பாலை சிறிது நேரம் கழித்துக் கொடுக்கக் கூடாது. கொட்டி விடவும்.
  • குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கிப் போட்டு விளையாட்டுக் காட்டக் கூடாது.
  • சின்ன சின்னப் பொருட்கள் தரையில் கிடந்தால் உடனே அதை எடுத்து மாற்றி விடுங்கள். குழந்தைகள் அதை எடுத்து வாயிலோ மூக்கிலோ போட்டுக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
  • சுவர் விளிம்புகள், கதவு மேஜை விளிம்புகள் கூராக இல்லாமல் பார்த்து அமைக்கவும்.
  • குழந்தைகள் அறைக்குள் சென்று கதவை தாள் போட்டுக் கொள்ளா வண்ணம் உயரமாக தாள்பாளை அமைக்கவும்.
  • குழந்தைகளுக்கான மருந்து குப்பியில் வேறு எதையும் ஊற்றி வைக்காதீர்கள் அவசரத்தில் மருந்தென்று மறந்து கொடுத்து விடுவோம்.
  • கத்திகள், ஊசிகள், கத்திரிகள், மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.
  • குழந்தைக்கு எட்டாத இடத்தில்தான் மண்ணெண்ணெய், பினாயில் போன்றவற்றை வைக்கவேண்டும். முக்கியமாக ஒன்றரையிலிருந்து இரண்டரை வயதுக் குழந்தை உள்ளவர்கள் வீட்டில் இந்த விஷயத்தில் மிகவும் முன்னெச்சரிக்கை தேவை.
  • கொசுவர்த்தி சுருள்கள் மூடிய அறைக்குள் மூச்சுத் திணறலை உண்டாக்கும். கொசு வலை தான் நல்லது. கொசுவிரட்டி மருந்துகள் குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

Blog Archive

Translate