Mar 14, 2017

BLACK HOLE – கருந்துளை மர்மங்கள்





அல்குர்ஆனின் வழியில் அறிவியல்…
அறிவார்ந்த நெறிநூலான அல்குர்ஆனில் ஏராளமான அறிவியல் உண்மைகளை உலக மக்களுக்குக் கூறி நேர்வழிக்கு அல்லாஹ் அழைக்கின்றான். போலி பொய்த் தெய்வங்களைப் புறந்தள்ளி, உங்களையும், உலகத்தையும், மாபெரும் பிரபஞ்சத்திலுள்ள சூரிய சந்திர, நட்சத்திரங்கள், கலாக்ஸிகளைப் படைத்தவனை மட்டும் வணங்குங்கள் என்று அறிவியல் உண்மைகளைக் கொண்டு உரைக்கின்றான்.
மனித சமுதாயம் நேர்வழி பெற வேண்டும் என்பதற்காக அல்குர்ஆனில் தனது வழிகாட்டும் வசனங்களை விவரித்துக் கூறுகிறான். தான் கூறும் உண்மைகளை மேலும் உறுதிப்படுத்து வதற்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதற்கும், தான் படைத்த படைப்புக்கள் மீது சத்தியமிட்டு சொல்கிறான். படைப்புக்கள் மீது சத்தியம் செய்யும் வசனங்களை குர்ஆனில் பரவ லாகக் காணலாம். உதாரணமாக, காலத்தின் மீது சத்தியமாக 103:1 இரவு, பகல் மீது சத்தியமாக 92:1 வானத்தின் மீது 86:1 மறுமை நாள் மீது 75:1 என்று பல்வேறு இடங்களில் தன் படைப்புகளின் மீது சத்தியமிட்டுச் சொல்கிறான். குர்ஆனில் அல்லாஹ் சொல்லும் சத்தியங்களிலேயே மிக மகத்தான சத்தியமாக ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறான்.

Mar 12, 2017

சர்வதேச மகளிர் தினம் – ஓர் இஸ்லாமிய அலசல்



ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 8ம் திகதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆண்களைப் போல் பெண்களுக்கும் சகல உரிமைகளும் வழங்கப்படவேண்டும் என 16ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிகளில் ஐரோப்பா முழுவதும் பல போராட்டங்கள் வெடித்தன. இதில் பெண்களுக்கான வாக்குரிமை, எட்டு மணி நேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம், அடிமைத்தனத்தில் இருந்து பெண்களை விடுவித்தல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இப்பிண்ணனியிலிருந்தே சர்வதேச மகளிர் தினம் பிரகடனப்படுத்தப்படுகின்றது.
மகளிர் தினம் என்று ஒரு நாளைக் குறிவைத்து பெண்களை நினைவுபடுத்தி அத்தினத்தைக் கொண்டாடுவதால் பெண்களுக்கு எல்லா உரிமைகளும் கிடைத்து விட்டது அல்லது கிடைத்துவிடும் என நினைப்பது அறியாமையாகும். ஏனென்றால் உலகின் பல பாகங்களில் இந்த நிமிடம் வரை பல இலட்சக்கணக்கான பெண்கள் ஏதோ ஒரு உரிமையை இழந்து பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை அன்றாடம் ஊடகங்கள் வழியாக நாம் அறிந்து கொள்கின்றோம்.

17ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிகளில் ஐரோப்பாவில் பெண்கள் மனிதப் பிறவிகளா? அவர்களுக்கு உயிர் உண்டா? என்ற வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன, ஆனால் இஸ்லாமிய மார்க்கம் 6ம் நூற்றாண்டிலேயே அதாவது 1435 வருடங்களுக்கு முன்பே பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் பொறுப்புக்கள் பற்றி பேசி பெண்களும் ஓர் உயரிய படைப்பு என்பதை நிரூபித்துள்ளது.
பெண்களுக்கான உரிமைகளை வழங்கிய இஸ்லாமிய மார்க்கத்தின் மீது சில கருத்துக் குருடர்கள் இஸ்லாம் பெண்களுக்கு உரிமைகளை வழங்கவில்லை என்றும் முஸ்லிம் சமூகம்தான் பெண்களை அடக்கி ஆள்;கின்றார்கள் என்றும் விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள்.

Mar 8, 2017

ஆன்லைனில் எப்ஐஆர் பதிவு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்




பிரச்சனைகள் இல்லாதவர்கள் யாரும் இல்லை. ஒரு சில பிரச்சனைகளுக்கு தீர்வு நம்மிடமே இருக்கும் . சில பிரச்சனைகளுக்கு தீர்வு வேறு ஒருவர் மூலம் கிடைக்கும் . ஆனால் சில பிரச்சனைகளை காவல் நிலையத்தின் மூலமாக தான் தீர்க்க முடியும் . இது போன்ற பிரச்சனையின் போது, காவல் நிலையம் செல்வதற்கே பெரும்பாலான மக்கள் தயக்கம் காண்பிப்பர்.

இந்நிலையில், ஆன்லைன் மூலமாகவே எப்ஐஆர் சேவை பெறலாம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் .

விளக்கம் :


தழிழ்நாடு காவல் துறை, வலைதல முதல் தகவல் அறிக்கையை (OnlineFIR) சமீபத்தில் துவங்கியது. இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே எப்ஐஆர் சேவையை பெறலாம் . இந்த வசதி தமிழ்நாடு மட்டுமின்றி டெல்லி, மும்பை, பெங்களூர், ஹரியானா, உத்திரபிரதேசம் போன்ற இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

எப்படி பயன்படுத்துவது ?



தவறான புகார்களை பதிவேற்றம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

இடி மின்னல் வழங்கும் இயற்கை உரம்.


அல்லாஹ்வின் நெறிநூலான அல்குர்ஆனில் அறிவியல் உண்மைகள், ஆய்வு வழிகாட்டு தல்கள் ஏராளமாக உள்ளன. அல்குர்ஆனை அறிவியல் நோக்கோடு ஆராயும்பொழுது அனேக நன்மைகளை மனித சமுதாயத்திற்கு அளிக்க முடியும். இதன் மூலம் நேர்வழியில் மக்கள் வருவதற்கு வாய்ப்பும் உள்ளது. ஆனால் துர்பாக்கியமாக, இன்று அல்குர்ஆன் வெறும் வணக்க வழிபாட்டு நூலாக மதரஸா முல்லாக்களிடம் முடக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற வணக்கங்கள் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் பொழுது இவைகளை கடமையாக விதித்து கடைபிடிக்கக் கட்டளையிடுகின்றான். இது போன்ற வசனங்களை ஆராய்ந்து பார், சிந்தித்துப் பார் என்று அல்லாஹ் கூறுவதில்லை. ஆனால் அல்லாஹ்வின் ஆற்றலை, அவனது படைப்புகளை, வல்லமையைப் பற்றி கூறும் ஆயிரக்கணக்கான வசனங்களில் நம்மை அவன் சிந்தித்துப் பார்க்க, ஆராய்ந்து கவனித்துப் பார்க்க வேண்டுகிறான். இவ்வசனங்களை ஆராய புரோகித உலமாக்களுக்கு தகுதியும் இல்லை. ஆர்வமும் இல்லை. ஏனெனில் இம்மதரஸாக்கள் உண்மையான ஆலிம்களை உருவாக்குவதற்குப் பதிலாக இமாமத் புரோகித கூலி ஆலிம்களை உற்பத்தி செய்கிறது.
“”(உங்களுக்கு) பயத்தையும், ஆதரவையும் தரக்கூடிய மின்னலை அவனே உங்கள் முன் பிரகாசிக்கச் செய்கிறான். (மழையை) சுமந்த பளுவான மேகங்களையும் அவனே உண்டாக்குகிறான்.’’ அல்குர்ஆன் 13:12
நயமும், பயமும் தரக்கூடியவாறு மின்னலை அவன் உங்களுக்கு காண்பிப்பதும், மேகத்திலிருந்து மழையைப் பொழியச் செய்து இறந்த பூமியை செழிக்கச் செய்வதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளனவாகும். அறிவுடைய மக்களுக்கு நிச்சயமாக இதில் (ஒன்றல்ல) பல அத்தாட்சிகள் இருக்கின்றன.’’ அல்குர்ஆன் 30:24

Mar 6, 2017

“பேரழிவு பெருங்கூட்டம் “யாஜுஜ்-மாஜுஜ்” என்னும் “ZOMBIE APOCALYSE”


னித குல வரலாற்றில் ஏராளமான பேரழிவுச் சம்பவங்கள் நடந்துள்ளன.இயற்கையின் சீற்றங்களான பெரும்ம ழை,புயல்,வெள்ளம்,எரிமலை,பூகம்பம், போன்றவற்றால் மனித குலம் அழிந்துள்ளது. மனிதர்களுக்கிடையே நடந்த பெரும் போர்களினால் கோடிக்கணக்கான மக்கள் மடிந்துள்ளனர். ஆனாலும் இது போன்ற பேரழிவு சம்பவங்களினால் ஒட்டு மொத்த மனித சமுதாயமும் அழிந்து விடவில்லை.
ஆனால் அல் குர்ஆனில் அல்லாஹ் கூறும் “யாஜுஜ்-மாஜுஜ்’ எனும் பெரும் கூட்டம், இறுதி நாளில் வெளியாகி பேரழிவில் ஈடுபடும்.இக்கூட்டத்தாரை எந்த மனிதராலும், எந்த வல்லரசாலும் தோற்கடிக்க முடியாது. எவராலும் வெல்லப்பட முடியாத பெருங்கொண்ட கூட்டமே யாஜுஜ்-மாஜுஜ். இன்று ஒவ்வொரு தொழுகையின் இறுதியில் கேட்கும் பிரார்த்தனைகளில் ஒன்று,”மஸீஹ் தஜ்ஜாலின்” தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுதல்.
இந்த தஜ்ஜாலை கொல்லக்கூடிய சக்தி மனிதர்களில் எவருக்கும் கிடையாது.அது இறுதி நாளில் மீண்டும் பூமிக்கு வரும் ஈஸா மஸீஹ் (அலை) அவர்களால் மட்டுமே அவனைக் கொல்ல முடியும்.ஆனாலும் இதற்குப் பின் வரும் பேரழிவு பெருங் கூட்டமான யாஜுஜ்-மாஜுஜ் இனத்தாரை ஈஸா (அலை) அவர்களாலும் அழிக்க முடியாது.அல்லாஹ் ஒருவனைத் தவிர.

இன்றைய அறிவியலின் உச்சத்தில் அணு ஆயுதங்களை வைத்து ஆட்டம் போடும் அனைத்து வல்லரசுகளையும் வெறும் வில், அம்பு ஆயுதங்களைக் கொண்டே யாஜுஜ்-மாஜுஜ் வென்று விடுவார்கள். மேட்டிலிருந்து தண்ணீர் எவ்வாறு பள்ளத்தில் விரைவாக பாய்வது போல் பூமியில் பரவி அனைவரையும் வென்று விடுவார்கள்.கையில் கிடைத்த அனைத்தையும் தின்று விடுவார்கள்.ஒரு சொற்பமான மனிதர்களைத் தவிர அனைத்து மனிதர்களையும் கொன்று தின்று விடுவார்கள்.

Mar 5, 2017

மரணத்தைத் தடுக்க மார்க்கம் உண்டா?”


பிறந்தவர் அனைவரும் இறப்பது உறுதி உலகம் தோன்றிய நாளிலிருந்து இவ்வுலகில் பிறந்த அனைவரும் இறந்து போனார்கள். இப்போது வாழ்ந்துக் கொண்டிருக்கும் அனைவரும் இறக்கத்தான் போகிறார்கள். உலகம் அழியும் வரை இனி பிறக்கப் போகிறவர்களும் இறப்பது நிச்சயம். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஒருவருக்கும் ஒருபோதும் சந்தேகமே இல்லை.
ஏக இறைவனை ஏற்றுக் கொண்டோரும், ஏராளமான தெய்வங்கள் இருப்பதாக நம்பிக் கொண்டிருப்போரும், இறைவனையே ஏற்க மறுத்தோரும் ‘மண்ணில் பிறந்த அனைவருக்கும் மரணம் நிச்சயம்” என்பதில் மாற்றுக் கருத்தைக் கொண்டிருக்கவில்லை. கண் முன்னே காண்பதை நம்புவதற்கு அறிவும் தேவையில்லை, ஆராய்ச்சியும் தேவையில்லை.
‘மரணத்தைத் தடுக்க ஏதேனும் மார்க்கம் உண்டா?” என்று ஆராய்ச்சி செய்தவர்களும் கூட ஒரு நாள் மரணித்துப் போனார்கள். குறைந்த பட்சம் தங்களுக்கு ஏற்பட்ட மரணத்தைத் தள்ளிப் போடக் கூட அவர்களால் இயலாமற்போனது. நாம் அனைவரும் ஒரு நாள் இறப்பது உறுதி. இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் எப்போது இறப்போம்? எப்படி இறப்போம்? எந்த இடத்தில் இறப்போம்? அந்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.
…தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன். (திருக்குர்ஆன் 31:34)
நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே! (திருக்குர்ஆன் 4:78)

Translate