Dec 29, 2010


விபத்து (விழிப்புணர்வு நாடகம்)


ச்சே! போன வாரந்தான் மெக்கானிக்கிட்டே போனேன்…. அதுக்குள்ள என்ன ஆச்சு? இந்த மிஸிரி மெக்கானிக்கிட்ட போனாலே இந்த மாதிரிதான். இதுல வேற தன்னை தொக்தர்னு (டாக்டர்னு) அலட்டிக்கிறான்.
வயது நாற்பதிலிருந்து நாற்பத்தைந்து இருக்கும். மருண்கலர் ஃபைபர் ஃபரேம் போட்ட கண்ணாடி அணிந்திருந்தார். கண் டாக்டரிடம் டெஸ்ட் செய்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது போலும். சவுதி அரேபியாவில் மக்கள் அதிகமாக வசிக்கும் ஜித்தா நகரின் வீதியை உற்று நோக்கியவாறு டொயாட்டோ கொரல்லா நீல நிற காரை டிரைவ் செய்துக்கொண்டிருந்தார்.
பக்கத்தில் அவரின் துணைவி. அவரைவிட கொஞ்சம் உயரம்போல் தெரிந்தாலும் கண்ணியமாக பர்தா அணிந்திருந்தார். இரண்டு பிள்ளைகள். ஜாம்ஜும் சென்டரில் சற்று முன்தான் பர்சேஸ் முடிந்திருந்தது. பர்ஸ் கனம் குறைந்து டிக்கி கணம் அதிகரித்திருக்க வேண்டும்.
இந்த எளவெடுத்த காரை மாத்ரீங்களா. உங்களோட வந்தவனெல்லாம் பெரிய பெரிய லாரியெல்லாம் வாங்கிட்டானுங்க. நீங்க ஏன்தான் இத கட்டி அலுவுரீங்களோன்னு தெரியல.
ம்…ஏன் சொல்லமாட்டே? அட கைக்கூலி வாங்கக்கூடாது வாணாம். சரி மாப்ளைக்கு அன்பா ஒரு சைக்கிளாவது வாங்கித்தராங்களா? உங்க வீட்ல. டவுன் பஸ்ல போய்கிட்டிருந்த நீ… பேசற….ம்
ம்…உம். போதும்! போதும்! நீங்க எழுத்தப் பார்த்து ஒழுங்கா ஓதுங்க! (ரோட்ட பார்த்து ஓட்டுங்க).



பறவைகளும் விலங்கினங்களும் மனிதர்களைப் போன்ற சமுதாயங்களே!
இவ்வுலகத்தில் ஊர்ந்து திரியும் விலங்கினங்களும் மற்றும் பறவைகளும் சமுதாயங்களாக (Communities) வாழ்கின்றன என்று அவைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் கூறுகிறார்கள்.
உதாரணமாக ஊர்வனவற்றில் எறும்பை எடுத்துக் கொண்டால், இவைகள் மனித சமுதாயத்தின் குணாதிசயங்களுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
மனித சமுதாயத்தைப் போலவே எறும்புகளுக்கும் மன்னர், அமைச்சர், இராணுவ வீரர்கள், பணியாட்கள், அடிமைகள் இருப்பதாக அந்த ஆய்வுகள் கூறுகின்றன. அவைகள் தங்களுக்குள் உணவு பண்டங்களை பண்டமாற்றம் செய்து கொள்வதற்காக அவைகளுக்கு சந்தைகளும் இருப்பதாக கூறப்படுகிறது.
அல்லாஹ் கூறுகிறான்: -

Dec 22, 2010


வீதியின் ஒழுக்கங்கள்


வீதியில் செல்லும் போது பார்வையைத் தாழ்த்தி செல்ல வேண்டும்.  அல்லாஹ் கூறுகிறான்:  (முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அல்குர்ஆன் 24:30, 31


வீதியில் ஆணவத்துடன் நடப்பது கூடாது


அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் உரையாடும் போது ''ஸலாம்'' எனக் கூறுவார்கள். அல் குர்ஆன் 25:63


மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.


பெண் குழந்தைகளால் சோதிக்கப்படுதல்

ஒரு பெண்மணி தனது இரு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரு குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டார். அவர் அதி­ருந்து சாப்பிட்டவில்லை. பிறகு அவர் எழுந்து சென்று விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், ''இவ்வாறு பல பெண் குழந்தைகளால் யார் சோதிக்கப்படுகிறாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்தி­ருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்'' எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1418, 5995

குழந்தைச் செல்வம் நமக்கு கிடைக்கும் மிகப் பெரிய பேறு. இந்த பாக்கியம் இல்லாதவர்கள் இன்று பல கோடிகளை கொட்டிக் கொடுத்தும் குழந்தை கிடைக்காமல் பரிதவிக்கும் நிலையை காண்கிறோம். அதே நேரத்தில் குழந்தையும் கிடைத்து, அவர்களை வளர்ப்பதற்குப் போதிய பொருளாதாரம் இல்லையென்றால் பெற்றோரின் கதியும் அவ்வளவு தான்.

Dec 19, 2010


செல்போன்களால் ஏற்படும் சமூகப்பிரச்சனைகள்




அப்பாஸ் அலீ எம். ஐ. எஸ். சீ

 அல்லாஹ் மனிதனுக்கு கொடுத்துள்ள அறிவை பயன்படுத்தி மனிதன் பல வியத்தகு சாதனைகளை புரிகின்றான். கற்பனைக்கு எட்டாத புதிய புதிய கண்டுபிடிப்புகளை கணக்கின்றி தொடர்ச்சியாக வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறான். வெறும் நூறு வருட கால இடைவெளியில் அவனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல்களை எண்ணிப்பார்த்தால் நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்க முடிவதில்லை. உலக வாழ்வில் பல இன்னல்களை அகற்றி நேரத்தையும் வேலையையும் இவனது கண்டுபிடிப்புகள் மிச்சப்படுத்தித் தருவதால் உலக மக்கள் அனைவரும் இக்கருவிகளை பெரிதும் விரும்புகிறார்கள்.
மக்களுக்கு பலனுள்ளதை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்ற எண்ணத்தில் எல்லா கண்டுபிடிப்பாளர்களும் தங்கள் படைப்புகளை வெளியிட்டாலும் நன்மையான காரியங்களுக்கு இவைகள் பயன்படுவதைப் போல் தீமையான காரியங்களுக்கும் பயன்படுகின்றன.

Dec 18, 2010


பூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே!


“நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் – நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது” (அல் குஆன் 39:21)
“மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம், நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்” (அல் குஆன் 23:18)
நாம் பள்ளிப்பாட புத்தகங்களில் நீரின் சுழற்சி (principle of Water cycle) என்பதைப் பற்றி படித்திருக்கின்றோம். ஆறுகள் மற்றும் கடல்களிலிருந்து நீர் ஆவியாகி, பின்னர் அந்த ஆவிகள் மேகங்களாக மாறி அந்த மேகங்கள் குளிர்ந்து மழையாக பெய்கின்றது என்றும், அந்த மழை நீரே பூமிக்குள் ஊடுருவிச் சென்று

Dec 9, 2010


                             புதிய வடிவில் மோசடி இ மெயில்கள்!

விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் எந்த அளவிற்கு வளர்கிறதோ அதற்கேற்ப மோசடி செய்பவர்களும் தங்களது மோசடி முறைகளை மாற்றிக்கொள்கிறார்கள். அந்த வகையான மோசடிகளில் ஒன்றுதான் வேலை தருவதாக கூறி வரும் மோசடி இ மெயில்கள்.
வங்கியிலிருந்து கேட்பதாக கூறி வங்கி கணக்கு எண் மற்றும் ரகசிய எண்ணை கேட்பது, "உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது; அதனை அனுப்பி வைப்பதற்கான கூரியர் செலவு மற்றும் டாக்குமெண்ட் கட்டணமாக இவ்வளவு தொகையை கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் செலுத்துங்கள்..." என்பதுமாதிரியான மெயில்களை அனுப்பிக்கொண்டிருந்தவர்கள், அவை மோசடியானது என்பது தெரியவந்துவிட்டதால், தற்போது தங்களது யுக்தியை மாற்றிக்கொண்டு, வேலை தேடுபவர்களை குறிவைக்கிறார்கள். இதுநாள் வரை பேருந்துகளிலும், ரயில்களிலும் பிட் நோட்டீஸ் அடித்து ஒட்டி, அதில் " பிரபல அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களுக்கு படித்த மற்றும் படிக்காத ஆட்கள் தேவை. மாதச் சம்பளம் 10,000 முதல்..." என்று வாயை பிளக்க வைக்கும் தொகையை குறிப்பிட்டு, முகவரி எதையும் தெரிவிக்காமல், செல்போன் எண்ணை மட்டும் தெரிவித்திருப்பார்கள்.
அதைப்பார்த்து ஏமாந்து தொடர்புகொள்பவர்களிடம், ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி,

Dec 4, 2010




குர்ஆனில் بَيْتُ الْعَنكَبُوتِ சிலந்தி வீடு






குர்ஆனில் بَيْتُ الْعَنكَبُوتِ  சிலந்தி வீடு
குர்ஆனில் வரும் 29-வது அத்தியாயத்திற்கு சூரத்துல் அன்கபூத் என்று பெயராகும். அன்கபூத் என்றால் ”சிலந்திப்பூச்சி” என்று பொருள்.

இறைவன் குர்ஆனில் இணைவைப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக 22:73,29:41; வசனங்களில் ஈயையும் சிலந்தியையும் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
يَا أَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوا لَهُ إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِن دُونِ اللَّهِ لَن يَخْلُقُوا ذُبَابًا وَلَوِ اجْتَمَعُوا لَهُ وَإِن يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ


மனிதர்களே! (உங்களுக்கோர்) உதாரணம் சொல்லப்படுகிறது.எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்யமாக நீங்கள் அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் (அழைத்துப்)பிரார்த்திக்கிறீர்களோ,அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும், ஒரு ஈயைந்கூட படைக்க முடியாது.மேலும் அவர்களிடமிருந்து (அது) ஒரு பொருளை எடுத்துச் சென்றால் அவர்களால் அந்த ஈயிடமிருந்து அதனைக் கைப்பற்றவும் முடியாது. தேடுவோனும் தேடப்படுபடுவோனும் பலகீனர்களே! (27:73)

Post image for Wi-Fi கதிர்கள்


Wi-Fi கதிர்கள்






Wi – Fi கதிர்களினால் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும், மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நெதர்லாந்தின் வெனிங்கன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின்போது விஞ்ஞானிகள் வெவ்வேறு வகையான கதிர்களை 20 மரங்களுக்கு சுமார் 3 மாதங்கள் வரை வழங்கி ஆராய்ச்சி செய்துள்ளனர்.
அப்போது (Wi – Fi) கதிர்களுக்கு அண்மையில் காணப்பட்ட மரங்களின் இலைகள் வேகமாக உதிர்ந்ததுடன், மரங்களில் கசிவுகளும் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதன் மூலம் வெளிப்படும் மின்காந்த அலைகள் சோளப்பயிர்களின் வளர்ச்சியினையும் பாதித்ததாகவும், சில நேரங்களில் மனிதனையும் பாதிக்கும் அபாயம் அதிகமாக இருப்பதாகவும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


உலகின் அதிவேக விரைவுக் கணினி (Fastest Supercomputer) அறிமுகம்!
தற்போதைய அதிவிரைவுக் கணினி ரோட்ரன்னரின் ஒரு பகுதி!நொடிக்கு ஒரு பெட்டாஃப்ளாப்ஸ் (Petaflops) கணக்கீடுகளை நிகழ்த்தும் அதிவிரைவுக் கணினி (Supercomputer) களை உருவாக்கும் ஆய்வில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த அமெரிக்க நிறுவனம் IBM, தற்போது அதனைச் சாத்தியப் படுத்தியுள்ளது. கணினி உலகில் நன்கு அறியப்பட்ட IBM நிறுவனமும், நியூ மெக்சிகோவிலிருக்கும் லாஸ் அலமாஸ் தேசிய ஆய்வுச் சாலையும் இணைந்து இந்தக் கணினியை உருவாக்கியுள்ளன. `ரோட்ரன்னர்' (Roadrunner) என்று அழைக்கப்படும் இந்த கணினி 100 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. IBM இதற்கு முன் உருவாக்கிய அதிவிரைவுக் கணினியான ப்ளூ ஜீன் (Blue Gene)-ஐக் காட்டிலும் இது இருமடங்கு வேகமாக செயல்படும். ஓர் ஒப்பீட்டிற்காக ப்ளூ ஜீன் அதிவிரைவுக் கணினி அதற்கடுத்த அதிவிரைவுக் கணினியைவிட மும்மடங்கு வேகத்தில் கணக்கீடுகள் செய்ய இயலும்.

Blog Archive

Translate