Sep 9, 2019

கூத்தாடிகளின் சாம்ராஜ்யம்!

Post image for கூத்தாடிகளின் சாம்ராஜ்யம்!









மக்களை அழிவுப் பாதையில் இட்டுச் செல்வதில் கூத்தாடிகள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்லர் ஊடகத்துறையினர். அவதூறுகளையும் பொய்ச் செய்திகளையும் பரப்பி பரபரப்பு ஏற்படுத்துவதில் மன்னர்கள்.அனைத்து வகை இதழ்களைத் திறந்தால் ஆபாசம், பெண்களின் அரை, முக்கால், முழு நிர்வாணம் காமத்தைத் தூண்டும் காட்சிகள். பெண்களை நிர்வாணமாகவும், ஆண்களை முழுமையாக உடல் மறைத்து ஆடை அணிபவர்களாகவும் காட்டும் மர்மம் என்ன? ஆண்கள் ஜட்டியோடு காட்சி அளித்தாலும் பரவாயில்லை. அதனால் ஆபாசம், காம உணர்வு ஏற்படப் போவதில்லை. அதற்கு மாறாக பெண்களின் அங்கங்கள் தெரிந்தால் போதும் ஆபாசம், காம உணர்வு பீரிட்டு பாயும். அப்படியானால் இன்றைய கூத்தாடிகள் என்ன செய்கின்றனர்? இரண்டு கால் மனிதனை அறிவை இழந்து இரண்டு கால் மிருகமாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். அதனால்தான் நாட்டில் ஈவ்டீஸிங், கற்பழிப்பு, கற்பழித்துக் கொலை என நாளுக்கு நாள் கணக்கு வழக்கு இல்லாமல் பெருகி வருகின்றன. அநியாய அட்டூழியங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன.
முன்னர் பொய்க்கடவுள்களைப் கற்பித்த புரோகிதர்கள் மறைவாகச் செய்த மன்மத லீலைகள் நாத்திகம் தலைதூக்கிய பின்னர் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம் ஆகி அந்த லீலைகள் பன்மடங்காகி வெள்ளித்திரை, சின்னத்திரைகளில் பவனிவர ஆரம்பித்து விட்டன. இயற்கையிலேயே இன விருத்திக்காக மனிதனிடம் காணப்படும் காம உணர்வு தவறான முறைகளில் தூண்டப்பட்டு எல்லை மீறி பெரும் தவறுகள் நிகழக் காரணமாகின்றது. இன்று நாட்டில் நீக்கமறக் காணப்படும் அனைத்து வகை அட்டூழியங்கள், கொடுமைகள், வன் செயல்கள், தீவிரவாதம் இன்ன பிற தீச்செயல்களை உரமிட்டு, நீர்பாய்ச்சி வளர்த்து வருவது கூத்தாடிகளின் நெறிகெட்ட செயல்களே!

Jul 27, 2019

வெளிநாடு செல்லும் முன் HRD, MEA சான்றிதழ் பெறுவது எப்படி?


Image result for Ministry of External Affairs chennai


நீங்கள் வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில் HRD, MEAதூதரக அனுமதி பெறுவது எப்படி?
 

HRD (Human Resource Development) எளிதில்பெறும் வழிமுறைகள்
வெளிநாடு வேலைக்கு செல்லும் முன் நமது Certificate HRD யிடம் முத்திரை பெறவேண்டும். நமது சான்றிதழ் உண்மையானதுதானா என சோதிக்க நமது சான்றிதழ் நாம் படித்த Universityக்கு அனுப்பி வைத்து அங்கு HRD முடித்து வரும்.

மிகவும் எளிமையான வழிமுறைகள் கொண்ட HRD செய்வதற்கு நம்மில் பலர் முயற்சி செய்யாமல் இடை தரகர்களிடம் பணத்தை கொடுத்து முடித்து விடுகின்றனர். நாம் நேரடியாக சென்று Apply செய்தால் Rs.535 ல் முடிந்துவிடும். இடைத்தரகர்கள் Rs.3000 முதல்Rs.4000 வரை கேட்பார்கள்.

Apply செய்ய வேண்டிய இடம்
பழைய தலைமச் செயலகம், சென்னை – 600 009.
(சென்னையின் எந்த பகுதியில் வசிப்ப‍வராக இருந்தாலும் பேரூந்து மூலமாக பாரிமுனைக்கு வந்து அங்கிருந்து ஆட்டோ அல்ல‍து பேரூந்தையோ பிடித்து தலை மைச்செயலகத்திற்கு வரலாம். அல்ல‍து தொடரூந்து அதாவது ரயில் மூலம் வருவதற்கு பீச் ஸ்டேஷனுக்கு வந்து அங்கிருந்து ஆட்டோவிலோ அல்ல‍து பேரூந்திலோ ஏறி தலைமைச் செயலகம் வரலாம்)

நேரம்: காலை 10 மணிக்கு மேல்

1. தேவையான Documents அட்டெஸ்டேசன் பெறவேண்டிய சான்றிதழ் மற்றும் அதன் இரு நகல்கள் (இருபுறமும்) 

Jul 18, 2019

பூமிக்கு இறக்கிய நீரின் அதிசயமும்… அதன் அவசியமும்…!


 There is still lots of debate over how Earth's oceans formed எல்லா உயிர்ப்பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான். அவற்றுள் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு; அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு; அவற்றில் நான்கு கால்களைக் கொண்டு நடப்பவையும் உண்டு; தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.    அல் குர்ஆன். 24;45
அல்லாஹ் படைத்த  இம்மாபெரும் பிரபஞ்சத்தில் வானம், பூமி, கோள்கள், நட்சத்திரங்கள் போன்ற பெரும்படைப்புகள் உள்ளன. அவனது எல்லா படைப்புகளுக்கும் ஆதாரமாக அவன் முதலில் படைத்தது ‘தண்ணீர்”. இன்று நாம் சர்வ சாதாரணமாக பயன்படுத்தும் நீரானது… அல்லாஹ்வின் தலையாய படைப்பு என்று எண்ணும்போதே அந்த நீரின் மகத்துவமும், கண்ணியமும் அதன் மதிப்பும் நமக்கு விளங்குகிறது. அல்லாஹ்வின் அருட்கொடையான நீரின் மதிப்பு தெரியாத காரணத்தால், இன்று சுற்றுச்சூழல் சீர் கேடானது, நீரை மாசுபடுத்துவதிலிருந்தே ஆரம்பமாகிறது.
நபி (ஸல்) அவர்கள்  கூறினார்கள், “ஆதியில் அல்லாஹ் மட்டுமே இருந்தான். அவனைத்தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. பிறகு படைக்கப்பட்ட அவனுடைய அர்ஷ் (சிம்மாசனம்)தண்ணீரின் மீது இருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ் பூள் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விசயங்களையும் எழுதினான். பின்னர், வானங்கள், பூமியைப் படைத்தான்.அறிவிப்பவர்: இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி),    புஹாரி. 3191.

Jul 16, 2019

ரேஷன் அட்டையில் மொபைல் எண்னை மாற்றம் செய்வது எப்படி ?




மண்டல அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என கடைக்காரர் கூறுவார். ஆனால் அது தேவையில்லை. 1967 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு. தமிழுக்கு ஒன்றை அழுத்தவும் அடுத்து குடும்ப அட்டை வைத்திருப்பவரா என்பதற்கு 2ஐ அழுத்தினால்....சேவை அதிகாரி உங்களுடன் பேசுவார்.

அவர் உங்கள் ரேஷன் கார்டில் மேலே உள்ள எண்ணை கேட்பார். எ.கா. 005/w/ 33657778 என்ற எண்ணை சொல்லவும்.

பின்னர் குடும்ப அட்டையில் உள்ள ஒருவரின் ஆதார் எண்ணை கேட்பார் அதையும் தெரிவிக்க வேண்டும்... நீங்கள் போன் செய்வதற்கு முன் ரேஷன் கார்டையும், ஆதார் கார்டையும் கையில் வைத்திருக்க வேண்டும்.

இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொன்னவுடன் நீங்கள் விரும்பிய மொபைல் நம்பரை பதிவு செய்யலாம்..அல்லது நம்பரை மாற்றலாம். அடுத்த 2 நிமிடங்களில் உங்கள் மொபைல் எண் ஆக்டிவேட் ஆகிவிடும்.

இதற்காக வேகாத வெயிலில் மண்டல அலுவலகம் சென்று நிற்க வேண்டாம். இதை தெரிந்தவர்களுக்கு பகிருங்கள்.
இதேபோல, ரேஷன் கடையில் நீங்கள் ஆதார் அட்டை மட்டும்தான் பதிவு செய்திருப்பீர்கள். ஆனால் போட்டோ கொடுத்திருக்க மாட்டீர்கள். அதனால் உங்களுக்கு ஸ்மார் கார்டு வராது.

போட்டோவை மொபைல் ஆப் மூலமாகவோ. அல்லது TNEPDS என்ற இணைதளம் மூலமாகவோ மட்டுமே அப்லோடு செய்ய முடியும். அதன் பிறகுதான் ஸ்மார்ட் கார்டு பிரிண்ட் செய்வார்கள்.

புதிதாகவும் ஸ்மார்ட் கார்டு ஆன் லைனில் அப்ளை செய்ய முடியும்...

Jul 4, 2019

நல் அமல்கள் நஷ்டமடையுமா?

நல் அமல்கள் நஷ்டமடையுமா?
அல்லாஹ்வின் விதிவிலக்குகளை வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பின்பற்ற வேண்டும் என்று முதலில் எனக்கும், பின்பு உங்களுக்கும் உபதேசம் செய்கிறேன்.
ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன்முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்;. அல்லஹ் தன்னைப்பற்றி நினைவு கூறுமாறு உங்களை எச்சரிக்கின்றான்;. இன்னும் அல்லஹ் தன் அடியார்கள் மீது கருணை உடையோனாக இருக்கின்றான். அல்குர்ஆன் 3:30
நாம் செய்த அமல்கள் எல்லாம் எந்த தரத்தில் உள்ளன. நம் அமல்கள் நம் மோசமான செயல்களினால் நஷ்டமடையுமா? தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளினால் நல் அமல்கள் எல்லாம் பாதிக்கப்படுமா? ஏனென்றால் நம் தவறான செயல்களினால் அல்லஹ்வின் முன் நிற்கும்போது, கைசேதப்பட்டு விடக்கூடாதே; அல்லாஹ் நம்மை இழிவுபடுத்தி விடக்கூடாதே; தோல்வியைத் தழுவிடக்கூடாதே என்பதற்காகத்தான்.

Translate