Oct 14, 2017

வங்கி கணக்கை ஒரு கிளையில் இருந்து வேறு கிளைக்கு மாற்றுவது எப்படி..?






 வங்கி கணக்கை ஒரு கிளையில் இருந்து வேறு கிளைக்கு மாற்றுவது எப்படி..?





வங்கி கணக்கை ஒரு கிளையில் இருந்து வேறு கிளைக்கு மாற்றுவது எப்படி..?



நீங்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வீடு மாறிவிட்டீர்கள் என்றால் உடனே செய்ய வேண்டிய முக்கிய பணிகளில் ஒன்று வங்கி கணக்கை உங்களது புதிய வீட்டின் அருகே உள்ள கிளைக்கு மாற்றுவது.


பணம் எடுப்பது, அல்லது டெபாசிட் செய்வதற்கு எந்த கிளையும் போதும் என்றாலும், லாக்கர் பெற, கிரெடிட் கார்ட் வசதி போன்ற சலுகைகள் பெற நாம் கணக்கு ஆரம்பித்த வங்கி கிளைக்கு தான் செல்ல வேண்டும். எனவே வங்கி கணக்கை ஒரு கிளையில் இருந்து இன்னொரு கிளைக்கு மாற்றுவது அவசியம். அதனை எப்படி மாற்றுவது என்பதையே இப்போது பார்க்கபோகிறோம்.



 வங்கி கணக்கை ஒரு கிளையில் இருந்து வேறு கிளைக்கு மாற்றுவது எப்படி..?


                    முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ஒரு விண்ணப்பம். வங்கி கணக்கு வைத்திருப்பவர் முதலில் வங்கி கிளையை மாற்றுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து புதிய கிளையிலோ அல்லது நாம் கணக்கு ஆரம்பித்த கிளையிலோ சம்பர்ப்பிக்க வேண்டும்.



நம்முடைய விண்ணப்பத்தில் நமது வங்கி கணக்கு எண், எந்த கிளைக்கு மாற்ற விரும்புகிறோம் என்ற விபரம் ஆகியவை இருக்க வேண்டும்.

Oct 12, 2017

செக்சுவல் ஹெல்த் குறித்து ஆண்கள் சாதாரணமாக எண்ணிவிட கூடாத 5 அறிகுறிகள்!






உடலில் எந்தவிதமான மாற்றம் ஏற்பட்டாலும் நமது உடல் அதை பற்றிய அறிகுறிகளை வெளிப்படுத்திவிடும். அது நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதா இருந்தாலும் சரி. இந்த அறிகுறிகளை நாம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டியது தான் அவசியம். நாம் மிகவும் சங்கோஜம் அடையும் பிரச்சனை அந்தரங்க பகுதிகளில் ஏற்படும் குறைகள். முக்கியமாக பிறப்புறுப்பு பகுதியல் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து மருத்துவரிடம் பேசவே பலரும் கூச்சப்படுவார்கள்.. அந்த வகையில் முக்கியமாக ஆண்கள் இந்த 5 அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது





அறிகுறி #1 ஆண்குறியின் முன் தோல் இறுக்கமாக இருப்பது, அல்லது ஆண்குறி தலை பகுதியில் ஆங்காங்கே வெள்ளை புள்ளிகள் தென்படுவது "Lichen Sclerosus" எனும் பாதிப்பு ஆகும். இது ஹார்மோன் அல்லது நோய் எதிர்ப்பு சமநிலை இழப்பு காரணமாக ஏற்படுகிறது.




அறிகுறி #2 அரிப்பு ஏற்படுவது இயல்பு. ஆனால், அரிப்பு காரணமாக அல்லது புண்கள் ஆண்குறியில் ஏற்படுவது அசாதாரணம். வலியில்லாமல் கூட இருக்கலாம். ஆனால், இது ஆண்குறி புற்றுநோய்க்கான அறிகுறி ஆகும். இதை சரிப்பார்க்காமல் விட்டுவிட்டால் ஆண்குறி நீக்க வேண்டிய நிலை கூட ஏற்படலாம்.





அறிகுறி #3 சிலருக்கு ஆண்குறி வளைந்து காணப்படும். இது இயல்பு தான். ஆனாலும், ஆண்குறி மிகவும் வளைந்து காணப்படுவது Peyronie எனும் நோயின் காரணம் ஆகும். இந்த நோய் எதனால் ஏற்படுகிறது என இது நாள் வரை தெளிவாக அறியப்படவில்லை. ஆனால், இது விறைப்பு தன்மையை பாதிக்கும். இது பெரும்பாலும் 40 வயதை கடந்த ஆண்கள் மத்தியில் தான் காணப்படுகிறது.





அறிகுறி #4 பருக்கள் அல்லது கட்டிகள் போன்று விதைப்பையில் தென்படுவது. இது விதைப்பை புற்றுநோய் அறிகுறி என கூறுகின்றனர். சிறுசிறு பருக்கள் போல தோன்றுவது சாதாரண இன்பெக்ஷன் அல்லது மயிர்கால் வளர்ச்சி ஏற்படும் போது அப்பகுதி முடிகளால் ஏற்படுவது என கூறப்படுகிறது. ஆயினும் கட்டி போன்று உண்டானால் உடனே பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.

Sep 21, 2017

ஆடையணிவதின்ஒழுக்கங்கள்

   ஆடையணிவதின்ஒழுக்கங்கள்

அல்லாஹ்வின் அருள்

يابَنِي آدَمَ قَدْ أَنزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا وَلِبَاسُ التَّقْوَى ذَلِكَ خَيْرٌ ذَلِكَ مِنْ آيَاتِ اللَّهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ(26) سورة الأعراف

ஆதமுடைய மக்களேஉங்கள் வெட்கத் தலங்களைமறைக்கும் ஆடையையும்அலங்காரத்தையும்உங்களுக்கு அருளியுள்ளோம். (இறைஅச்சம் எனும்ஆடையே சிறந்ததுஅவர்கள் சிந்திப்பதற்காக இதுஅல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது.
                (அல்குர்ஆன் 7: 26)
وَاللَّهُ جَعَلَ لَكُمْ مِمَّا خَلَقَ ظِلَالًا وَجَعَلَ لَكُمْ مِنْ الْجِبَالِ أَكْنَانًا وَجَعَلَ لَكُمْ سَرَابِيلَ تَقِيكُمْ الْحَرَّ وَسَرَابِيلَ تَقِيكُمْ بَأْسَكُمْ كَذَلِكَ يُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تُسْلِمُونَ(81) سورة النحل

வெப்பத்திலிருந்து உங்களைக் காக்கும் சட்டைகளையும்போரில் உங்களைக் காக்கும் கவசஉடைகளையும் அவன் ஏற்படுத்தினான்நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதற்காக இவ்வாறே அவன்தனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தினான். (அல்குர்ஆன் 16 : 81)

அழகிய ஆடை

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ قَالَ رَجُلٌ إِنَّ الرَّجُلَ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَنًا وَنَعْلُهُ حَسَنَةً قَالَ إِنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ الْكِبْرُ بَطَرُ الْحَقِّ وَغَمْطُ النَّاسِ رواه مسلم

நபி (ஸல்அவர்கள் "யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர்சொர்க்கத்தில் நுழையமாட்டார்'' என்று கூறினார்கள்அப்போது ஒரு மனிதர், "தமது ஆடைஅழகாக இருக்க வேண்டும்தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர்விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)'' என்று கேட்டார்அதற்கு நபி (ஸல்)அவர்கள், "அல்லாஹ் அழகானவன்அழகையே அவன் விரும்புகின்றான்தற்பெருமைஎன்பது (ஆணவத்தோடுஉண்மையை மறுப்பதும்மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்''என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)நூல் : முஸ்லிம் (147)

அழுக்கான ஆடையணியத் தடை

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَى رَجُلًا شَعِثًا قَدْ تَفَرَّقَ شَعْرُهُ فَقَالَ أَمَا كَانَ يَجِدُ هَذَا مَا يُسَكِّنُ بِهِ شَعْرَهُ وَرَأَى رَجُلًا آخَرَ وَعَلْيِهِ ثِيَابٌ وَسِخَةٌ فَقَالَ أَمَا كَانَ هَذَا يَجِدُ مَاءً يَغْسِلُ بِهِ ثَوْبَهُ رواه أبو داود

நபி (ஸல்அவர்கள் ஒரு மனிதர் அழுக்கான ஆடை அணிந்தவராக நிற்பதைப் பார்த்தார்கள்.அப்போது ''இவர் தனது ஆடையை தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு பொருளை பெற்றுக்கொள்ளவில்லையா?'' என்று  கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),  நூல் : அபூதாவூத் (3540)

வலது புறமாக ஆரம்பிக்க வேண்டும்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَبِسْتُمْ وَإِذَا تَوَضَّأْتُمْ فَابْدَءُوا بِأَيَامِنِكُمْ رواه أبو دود
நபி (ஸல்அவர்கள் கூறினார்கள் : நீங்கள் ஆடையணியும் போதும்உளூச் செய்யும் போதும்உங்களுடைய வலது புறங்களிலிருந்தே ஆரம்பம் செய்யுங்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுýரைரா (ரலி),  நூல் : அபூதாவூத் (3612)

புத்தாடையணியும் போது ஓத வேண்டிய துஆ

عَنْ أَبِي سَعِيدٍ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَجَدَّ ثَوْبًا سَمَّاهُ بِاسْمِهِ عِمَامَةً أَوْ قَمِيصًا أَوْ رِدَاءً ثُمَّ يَقُولُ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ أَسْأَلُكَ خَيْرَهُ وَخَيْرَ مَا صُنِعَ لَهُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ رواه الترمذي

நபி (ஸல்அவர்கள் புத்தாடை அணியும் போது தலைப்பாகைசட்டை என்று அந்தஆடையின் பெயரைக் கூறி பிறகு '' அல்லாஹுýம்ம லகல் ஹம்துஅன்த கஸவ்தனீஹி,அஸ் அலுக ஹைரகு வஹைர மாஸுýனிஅ லஹுý.  அவூது பிக மின் ஷர்ரிஹி  ஷர்ரிமாஸுýனிஅ லஹுý'' என்று கூறுவார்கள்.
பொருள் : அல்லாஹ்வே இந்த ஆடையை எனக்கு அணிவித்த உனக்கே புகழ் அனைத்தும்.இந்த ஆடையின் நன்மையையும் இது எதற்காக தயாரிக்கப்பட்டதோ அதன் நன்மையையும்உன்னிடம் நான் கேட்கிறேன்இதனுடைய தீமையையும் இது எதற்காக தயாரிக்கப்பட்டதோஅதனுடைய தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி),  நூல் : திர்மிதீ (1689)

Mar 14, 2017

BLACK HOLE – கருந்துளை மர்மங்கள்





அல்குர்ஆனின் வழியில் அறிவியல்…
அறிவார்ந்த நெறிநூலான அல்குர்ஆனில் ஏராளமான அறிவியல் உண்மைகளை உலக மக்களுக்குக் கூறி நேர்வழிக்கு அல்லாஹ் அழைக்கின்றான். போலி பொய்த் தெய்வங்களைப் புறந்தள்ளி, உங்களையும், உலகத்தையும், மாபெரும் பிரபஞ்சத்திலுள்ள சூரிய சந்திர, நட்சத்திரங்கள், கலாக்ஸிகளைப் படைத்தவனை மட்டும் வணங்குங்கள் என்று அறிவியல் உண்மைகளைக் கொண்டு உரைக்கின்றான்.
மனித சமுதாயம் நேர்வழி பெற வேண்டும் என்பதற்காக அல்குர்ஆனில் தனது வழிகாட்டும் வசனங்களை விவரித்துக் கூறுகிறான். தான் கூறும் உண்மைகளை மேலும் உறுதிப்படுத்து வதற்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதற்கும், தான் படைத்த படைப்புக்கள் மீது சத்தியமிட்டு சொல்கிறான். படைப்புக்கள் மீது சத்தியம் செய்யும் வசனங்களை குர்ஆனில் பரவ லாகக் காணலாம். உதாரணமாக, காலத்தின் மீது சத்தியமாக 103:1 இரவு, பகல் மீது சத்தியமாக 92:1 வானத்தின் மீது 86:1 மறுமை நாள் மீது 75:1 என்று பல்வேறு இடங்களில் தன் படைப்புகளின் மீது சத்தியமிட்டுச் சொல்கிறான். குர்ஆனில் அல்லாஹ் சொல்லும் சத்தியங்களிலேயே மிக மகத்தான சத்தியமாக ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறான்.

Mar 12, 2017

சர்வதேச மகளிர் தினம் – ஓர் இஸ்லாமிய அலசல்



ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 8ம் திகதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆண்களைப் போல் பெண்களுக்கும் சகல உரிமைகளும் வழங்கப்படவேண்டும் என 16ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிகளில் ஐரோப்பா முழுவதும் பல போராட்டங்கள் வெடித்தன. இதில் பெண்களுக்கான வாக்குரிமை, எட்டு மணி நேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம், அடிமைத்தனத்தில் இருந்து பெண்களை விடுவித்தல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இப்பிண்ணனியிலிருந்தே சர்வதேச மகளிர் தினம் பிரகடனப்படுத்தப்படுகின்றது.
மகளிர் தினம் என்று ஒரு நாளைக் குறிவைத்து பெண்களை நினைவுபடுத்தி அத்தினத்தைக் கொண்டாடுவதால் பெண்களுக்கு எல்லா உரிமைகளும் கிடைத்து விட்டது அல்லது கிடைத்துவிடும் என நினைப்பது அறியாமையாகும். ஏனென்றால் உலகின் பல பாகங்களில் இந்த நிமிடம் வரை பல இலட்சக்கணக்கான பெண்கள் ஏதோ ஒரு உரிமையை இழந்து பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை அன்றாடம் ஊடகங்கள் வழியாக நாம் அறிந்து கொள்கின்றோம்.

17ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிகளில் ஐரோப்பாவில் பெண்கள் மனிதப் பிறவிகளா? அவர்களுக்கு உயிர் உண்டா? என்ற வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன, ஆனால் இஸ்லாமிய மார்க்கம் 6ம் நூற்றாண்டிலேயே அதாவது 1435 வருடங்களுக்கு முன்பே பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் பொறுப்புக்கள் பற்றி பேசி பெண்களும் ஓர் உயரிய படைப்பு என்பதை நிரூபித்துள்ளது.
பெண்களுக்கான உரிமைகளை வழங்கிய இஸ்லாமிய மார்க்கத்தின் மீது சில கருத்துக் குருடர்கள் இஸ்லாம் பெண்களுக்கு உரிமைகளை வழங்கவில்லை என்றும் முஸ்லிம் சமூகம்தான் பெண்களை அடக்கி ஆள்;கின்றார்கள் என்றும் விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள்.

Mar 8, 2017

ஆன்லைனில் எப்ஐஆர் பதிவு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்




பிரச்சனைகள் இல்லாதவர்கள் யாரும் இல்லை. ஒரு சில பிரச்சனைகளுக்கு தீர்வு நம்மிடமே இருக்கும் . சில பிரச்சனைகளுக்கு தீர்வு வேறு ஒருவர் மூலம் கிடைக்கும் . ஆனால் சில பிரச்சனைகளை காவல் நிலையத்தின் மூலமாக தான் தீர்க்க முடியும் . இது போன்ற பிரச்சனையின் போது, காவல் நிலையம் செல்வதற்கே பெரும்பாலான மக்கள் தயக்கம் காண்பிப்பர்.

இந்நிலையில், ஆன்லைன் மூலமாகவே எப்ஐஆர் சேவை பெறலாம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் .

விளக்கம் :


தழிழ்நாடு காவல் துறை, வலைதல முதல் தகவல் அறிக்கையை (OnlineFIR) சமீபத்தில் துவங்கியது. இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே எப்ஐஆர் சேவையை பெறலாம் . இந்த வசதி தமிழ்நாடு மட்டுமின்றி டெல்லி, மும்பை, பெங்களூர், ஹரியானா, உத்திரபிரதேசம் போன்ற இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

எப்படி பயன்படுத்துவது ?



தவறான புகார்களை பதிவேற்றம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

இடி மின்னல் வழங்கும் இயற்கை உரம்.


அல்லாஹ்வின் நெறிநூலான அல்குர்ஆனில் அறிவியல் உண்மைகள், ஆய்வு வழிகாட்டு தல்கள் ஏராளமாக உள்ளன. அல்குர்ஆனை அறிவியல் நோக்கோடு ஆராயும்பொழுது அனேக நன்மைகளை மனித சமுதாயத்திற்கு அளிக்க முடியும். இதன் மூலம் நேர்வழியில் மக்கள் வருவதற்கு வாய்ப்பும் உள்ளது. ஆனால் துர்பாக்கியமாக, இன்று அல்குர்ஆன் வெறும் வணக்க வழிபாட்டு நூலாக மதரஸா முல்லாக்களிடம் முடக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற வணக்கங்கள் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் பொழுது இவைகளை கடமையாக விதித்து கடைபிடிக்கக் கட்டளையிடுகின்றான். இது போன்ற வசனங்களை ஆராய்ந்து பார், சிந்தித்துப் பார் என்று அல்லாஹ் கூறுவதில்லை. ஆனால் அல்லாஹ்வின் ஆற்றலை, அவனது படைப்புகளை, வல்லமையைப் பற்றி கூறும் ஆயிரக்கணக்கான வசனங்களில் நம்மை அவன் சிந்தித்துப் பார்க்க, ஆராய்ந்து கவனித்துப் பார்க்க வேண்டுகிறான். இவ்வசனங்களை ஆராய புரோகித உலமாக்களுக்கு தகுதியும் இல்லை. ஆர்வமும் இல்லை. ஏனெனில் இம்மதரஸாக்கள் உண்மையான ஆலிம்களை உருவாக்குவதற்குப் பதிலாக இமாமத் புரோகித கூலி ஆலிம்களை உற்பத்தி செய்கிறது.
“”(உங்களுக்கு) பயத்தையும், ஆதரவையும் தரக்கூடிய மின்னலை அவனே உங்கள் முன் பிரகாசிக்கச் செய்கிறான். (மழையை) சுமந்த பளுவான மேகங்களையும் அவனே உண்டாக்குகிறான்.’’ அல்குர்ஆன் 13:12
நயமும், பயமும் தரக்கூடியவாறு மின்னலை அவன் உங்களுக்கு காண்பிப்பதும், மேகத்திலிருந்து மழையைப் பொழியச் செய்து இறந்த பூமியை செழிக்கச் செய்வதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளனவாகும். அறிவுடைய மக்களுக்கு நிச்சயமாக இதில் (ஒன்றல்ல) பல அத்தாட்சிகள் இருக்கின்றன.’’ அல்குர்ஆன் 30:24

Mar 6, 2017

“பேரழிவு பெருங்கூட்டம் “யாஜுஜ்-மாஜுஜ்” என்னும் “ZOMBIE APOCALYSE”


னித குல வரலாற்றில் ஏராளமான பேரழிவுச் சம்பவங்கள் நடந்துள்ளன.இயற்கையின் சீற்றங்களான பெரும்ம ழை,புயல்,வெள்ளம்,எரிமலை,பூகம்பம், போன்றவற்றால் மனித குலம் அழிந்துள்ளது. மனிதர்களுக்கிடையே நடந்த பெரும் போர்களினால் கோடிக்கணக்கான மக்கள் மடிந்துள்ளனர். ஆனாலும் இது போன்ற பேரழிவு சம்பவங்களினால் ஒட்டு மொத்த மனித சமுதாயமும் அழிந்து விடவில்லை.
ஆனால் அல் குர்ஆனில் அல்லாஹ் கூறும் “யாஜுஜ்-மாஜுஜ்’ எனும் பெரும் கூட்டம், இறுதி நாளில் வெளியாகி பேரழிவில் ஈடுபடும்.இக்கூட்டத்தாரை எந்த மனிதராலும், எந்த வல்லரசாலும் தோற்கடிக்க முடியாது. எவராலும் வெல்லப்பட முடியாத பெருங்கொண்ட கூட்டமே யாஜுஜ்-மாஜுஜ். இன்று ஒவ்வொரு தொழுகையின் இறுதியில் கேட்கும் பிரார்த்தனைகளில் ஒன்று,”மஸீஹ் தஜ்ஜாலின்” தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுதல்.
இந்த தஜ்ஜாலை கொல்லக்கூடிய சக்தி மனிதர்களில் எவருக்கும் கிடையாது.அது இறுதி நாளில் மீண்டும் பூமிக்கு வரும் ஈஸா மஸீஹ் (அலை) அவர்களால் மட்டுமே அவனைக் கொல்ல முடியும்.ஆனாலும் இதற்குப் பின் வரும் பேரழிவு பெருங் கூட்டமான யாஜுஜ்-மாஜுஜ் இனத்தாரை ஈஸா (அலை) அவர்களாலும் அழிக்க முடியாது.அல்லாஹ் ஒருவனைத் தவிர.

இன்றைய அறிவியலின் உச்சத்தில் அணு ஆயுதங்களை வைத்து ஆட்டம் போடும் அனைத்து வல்லரசுகளையும் வெறும் வில், அம்பு ஆயுதங்களைக் கொண்டே யாஜுஜ்-மாஜுஜ் வென்று விடுவார்கள். மேட்டிலிருந்து தண்ணீர் எவ்வாறு பள்ளத்தில் விரைவாக பாய்வது போல் பூமியில் பரவி அனைவரையும் வென்று விடுவார்கள்.கையில் கிடைத்த அனைத்தையும் தின்று விடுவார்கள்.ஒரு சொற்பமான மனிதர்களைத் தவிர அனைத்து மனிதர்களையும் கொன்று தின்று விடுவார்கள்.

Mar 5, 2017

மரணத்தைத் தடுக்க மார்க்கம் உண்டா?”


பிறந்தவர் அனைவரும் இறப்பது உறுதி உலகம் தோன்றிய நாளிலிருந்து இவ்வுலகில் பிறந்த அனைவரும் இறந்து போனார்கள். இப்போது வாழ்ந்துக் கொண்டிருக்கும் அனைவரும் இறக்கத்தான் போகிறார்கள். உலகம் அழியும் வரை இனி பிறக்கப் போகிறவர்களும் இறப்பது நிச்சயம். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஒருவருக்கும் ஒருபோதும் சந்தேகமே இல்லை.
ஏக இறைவனை ஏற்றுக் கொண்டோரும், ஏராளமான தெய்வங்கள் இருப்பதாக நம்பிக் கொண்டிருப்போரும், இறைவனையே ஏற்க மறுத்தோரும் ‘மண்ணில் பிறந்த அனைவருக்கும் மரணம் நிச்சயம்” என்பதில் மாற்றுக் கருத்தைக் கொண்டிருக்கவில்லை. கண் முன்னே காண்பதை நம்புவதற்கு அறிவும் தேவையில்லை, ஆராய்ச்சியும் தேவையில்லை.
‘மரணத்தைத் தடுக்க ஏதேனும் மார்க்கம் உண்டா?” என்று ஆராய்ச்சி செய்தவர்களும் கூட ஒரு நாள் மரணித்துப் போனார்கள். குறைந்த பட்சம் தங்களுக்கு ஏற்பட்ட மரணத்தைத் தள்ளிப் போடக் கூட அவர்களால் இயலாமற்போனது. நாம் அனைவரும் ஒரு நாள் இறப்பது உறுதி. இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் எப்போது இறப்போம்? எப்படி இறப்போம்? எந்த இடத்தில் இறப்போம்? அந்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.
…தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன். (திருக்குர்ஆன் 31:34)
நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே! (திருக்குர்ஆன் 4:78)

Feb 27, 2017

யார் இந்த பொய்யன்


அல்லாஹ்வின் கண்ணியத்தில் கை வைத்த மிர்ஸா குலாம் அஹ்மது
மிர்ஜா குலாம் அஹ்மது பொய்யன் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்
முன்னுரை
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே நாம் அனைவரும் பிறப்பின் அடிப்படையில் மனித சமுதாயமாகவும் ஆதம் (அலை) என்ற முதல் நபியின் பிள்ளைகளாகவும் இருக்கிறோம். நம்மில் நல்லவர்களும் உள்ளனர் தீயவர்களும் உள்ளனர் இதைப் பற்றி அறிந்து நம் பாதையை முறையாக்கிக்கொள்வதே இந்த கட்டுரையின் உட்கருத்தாகும்!

ஆதம் நபியின் நற்குணம்
முதல் மனிதராகவும், மனித வர்க்கத்தின் ஆதி பிதாவாகவும் திகழும் அன்பிற்கினிய நம் ஆதம் நபி (அலை) அவர்கள் இறைவனிடம் நேரடியாக பேச அனுமதியும், அருளும் பெற்றவராக திகழ்ந்தார். இறைவன் அவருக்கு கற்றுக்கொடுத்தான் இதற்கான ஆதாரம்

பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்;) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான். (அல்குர்ஆன் 2:37)

Blog Archive

Translate